வியாழன், 1 டிசம்பர், 2022

🔥 மரணமிலா பெருவாழ்வு பெற கண் தான் வழி 🔥


சாகாக்கல்வி நூலிலிருந்து : 36
🔥 கண் தான் வழி 🔥


கண்ணே என மணியே என நம் குழந்தையை கொஞ்சுகிறோம் !
காதலன் காதலியை கண்ணே என்கிறான் !
கணவன் மனைவியர் கண்ணே என்பார்கள் !
பெற்றோர், பெரியோர் பாதம்தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்கிறோம் !

கோவிலில் கற்பூர ஆராதனை முடிந்து தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொள்கின்றோம் !

கண் கண்ட தெய்வம் என பெற்றோரை முதலிலும் கண்ணில் கண்ட தெய்வத்தை குரு அருளால் பின்னரும் கண்டு உய்கிறோம் !

கண் அவனே கணவன் உலகில் பெண்களுக்கு, கணவனே கண் கண்ட தெய்வம் !

ஜீவாத்மாவாகிய பெண்களாகிய மனிதர்களுக்கு பரமாத்மாவாகிய ஆணாகிய பரம்பொருள் நம் கண்ணில் நாம் காணும் தெய்வமாக உள்ளது !

பரம்பொருள் நம் கண்ணில் மெய்ப்பொருளாக உள்ளது !

மெய்ப்பொருள் உபதேசம் தீட்சை பெற்றவரே துவிஜன் ! மீண்டும் பிறந்தவன் !
மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்வோரே பிறவாநிலை பெறுவர் ! இறவாநிலை அடைவர் !
மெய்ப்பொருளை சொல்லி புரியவைத்து உணர வைப்பவரே ஞான சற்குரு 

தவம் செய்து ! சும்மா இருந்து தன்னை உணர்பவரே ஞானி 

மரணமிலா பெருவாழ்வு பெறுவர் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts