திங்கள், 17 அக்டோபர், 2022

🔥 பூமி சுழல என்ன காரணம்? 🔥

சாகாக்கல்வி நூலிலிருந்து : 27

🔥 பூமி சுழல என்ன காரணம்? 🔥

கண்மணி அந்தரத்தில் இருக்கிறது எனச் சொன்னேன் அல்லவா ?
எந்த ஒரு பொருளாவது அந்தரத்தில் நிற்குமா ?
நிற்கும் ! நாம் இருக்கும் பூமி அந்தரத்தில் தானே இருக்கிறது ?!

பூமி எப்படி அந்தரத்தில் ஆகாயத்தில் இருக்கிறதோ அதுபோல் தான் கண்மணியும் இருக்கிறது !?

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என ஞானியர் கூற்று !
அண்டத்தில் எவ்வாறோ ? அவ்வாறே பிண்டத்திலும் !
இதுவே உண்மை !

பூமி உருண்டையாக, கோளமாக பந்துபோல இருக்கிறது ! அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது !

உருண்டையான பூமி ஆகாயத்தில் சுற்றுகிறது ?
முடியுமா ? சுற்றுகிறதே !?

இப்படி இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா ?
என்ன அது ? பூமி சுழல என்ன காரணம் ?

பூமியின் உள்ளே, மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு குழம்பே, அதன் வேகமே, சக்தியே பூமியை சுழல வைக்கின்றது !! அந்த நெருப்பு குழம்பு தான் எரிமலையில் வெளிப்படுகிறது !
ஆக உள்ளிருக்கும் நெருப்புதான் சுழல்வதற்கும் காரணம் ! புவியீர்ப்பு விசைக்கும் காரணம் !

கண்மணியிலும் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பு இருப்பதால் தான் கண்மணியும் சுழல்கிறது ஆகாயத்தில் நிற்கிறது !

இதன்மூலமும் கண்ணில் மணியில் நெருப்பு உள்ளது என நிரூபணமாகிறது !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts