ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வள்ளலார் - முருகப் பெருமான் அனுபவம்


வள்ளல் பெருமான் தன்வீட்டில் சிறுவயதிலே கண்ணாடியில் ஆறுமுக கடவுளை கண்டவரல்லவா?

எப்படி? கண் - ஆடியில் இருமூன்று ஆறு. முகத்துக்கு முகமான ஆறு வட்டத்தை ஆறுமுகமாக ஒளிவிட்டு ஜொலிக்கும் அழகை கண்டார்.

பன்னிரு கரம் - சூரிய கலை 12 ஆகும். மயில் மீது - பல வண்ண ஒளிகளோடு பார்த்தார். சேவல் கொடி - தசவித நாதம் கேட்டார். மயிலே பலவர்ண  ஒளியாகவும் சேவலை நாதமாக கூறப்படுகிறது.

வள்ளல் பெருமான் கண் திறந்து தவமியற்றும் போது தன் கண்ணையே கண்மணி ஒளியை நாதத்தொனியுடன் கேட்டு பார்த்து பரவமானார் .

ஜோதி ஏற்றி கண்ணை நாடி தியானம் செய்யும் போது பலவர்ண ஒளிகளை தன் கண்களிலேயே கண்டார். அப்போது நாதமும் கேட்டது! தன் கண்களையே தன் முன்னால் கண்டார். இது ஞான அனுபவம். சிறுவன் வள்ளலாருக்கு அப்போதே சித்திதத்தது - தித்தித்தது. திரு அருட்பா ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டது.

"நானுரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன் தன் வார்த்தையன்றோ" என்றே
வள்ளல் பெருமான் கூறுகிறார்.

எப்படி? சிறுவனாக இருக்கும் போதே, தன் கண்ணிலே ஆடிக்கொண்டிருக்கும் ஒளியை , திருவடியை கண்டார். தன்னுள் இறைவனை ஜோதியை - பரமாத்மாவை உணர்ந்தார்.

தன்னுள்ளிருந்து இறைவன்தான் எல்லாம் நடத்துகிறார் என்று நமக்கு சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts