ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

ஆறு ஆறுக்கு அப்பால்


அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம் பொருள்
இருக்குமிடம் நம் உடலில் ஆறாறுக்கப்பால்! நமது
கண்கள் ஒவ்வொன்றும் மூன்று வட்டங்கள் இரு கண்கள் ஆறுவட்டம்!

இரு கண்களாகிய ஆறுவட்டம் தாண்டி உள்ளே போனால் நெருப்பாறு,
மயிர்பாலம் வெண்சாரை உண்டு.

ஆறுவட்டங்களை தாண்டி ஆறுபோல் ஓடி ஒளி உள்ளே போகும். பரிபாசையாக  சொன்ன மெய் மெய்யனுபவம் இது!

ஆறாறு முப்பத்தாறு. மயிர்பாலம் ஏறி  நெருப்பாறு தாண்டி போகும் போது
வெண்சாரை வந்து மறிக்கும் . அதை உண்டு முன்னோக்கி போனால்
இறைவனை காணலாம். இந்த நிலை பெற்றவன் ஆறாறு முப்பத்தாறு
தத்துவம் வென்றவனாகிறான். ஆத்ம ஜோதி தரிசனம் கண்டவன் இறப்பதில்லை.மரணமிலா பெருவாழ்வு பெறுவான். வள்ளலார் துணையாக வந்து நம்மை கரைசேர்ப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts