சனி, 13 ஆகஸ்ட், 2016

முக்கண்ணியை தொழுவர் முக்திபெறுவர்!

கன்னி ய குமரியே - ய விலே இருப்பவளே வாலை! கன்னியும்
அவளே, 6 வயது குழந்தை! குமரி அவளே, 16 வயது சௌந்தர்ய
மங்கை! உலகுயிர்க்கு தாயும் அவளே அமுதம் தருவதால்!

தவம் செய்யும் ஞானிகள் உணர்வர் வாலையின் மகிமையை!
உலக மக்களுக்கு உயிர் கொடுத்து அந்த உயிராகவே சிவமாகவே ஒளிர்ப்பவளே வாலை!

அந்த மாபெரும் சக்தியை, வாலையை ஞான தவம் செய்து நாமும்
அந்த வாலை திருவடியை அடையலாம்! அதற்க்கு கண்ணை விழித்து சும்மா
இருக்கும் தவம் செய்!

ஞானம் பெற விழி! விழி வாலை காட்டுவாள்!
வாலையே கன்னி யாவிலே இருப்பவள் குமரி! கன்னியாகுமரி பகவதியம்மனே  வாலைத் தாய்!  முக்கண்ணாம் முக்கடல் தீர்த்தமாடி முக்கண்ணியை தொழுவர் முக்திபெறுவர்! வா கன்னியாகுமரிக்கு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts