திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 3

நாமே
சாதனை செய்தால்
சாதிக்கலாம் சர்வமும் பெறலாம்

பெறலாம்
வைராக்கியம் இருந்தால்
பேரின்பம் தானாய் வந்திடுமே

வந்திடும்
சன்மார்க்க ஒழுக்கத்தில்
வகையாய் மூலம் அறிந்து

அறிந்தே
எட்டும் இரண்டே
பரிபாசை அனைத்தும் ஒன்றே

ஒன்றே
மனதை செலுத்தியே
கடவுள் ஒருவரே உணர்வீர்

உணர்வீர்
உம்முள் இருப்பதை
பிரம்மம் சீவனாய் ஒளியாகியே

ஒளியாகியே
எங்குமாய் நிறைந்தவன்
நம்மிலும் இருக்கிறார் நாடுவோமே

நாடுவோமே
நாதன் இருப்பிடத்தை
நம்புங்கள் நமன் இல்லையே

ஞானசற்குரு

 ஜோதி ஐக்கூ அந்தாதி  -  2                   ஜோதி ஐக்கூ அந்தாதி  -  4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts