ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 5



கூட்டே
பத்து வரவே
எட்டும் இரண்டும் பத்தே

பத்தே
நாதங்கள் கேட்குமே
மயில் குயிலாகும் விந்தையே

விந்தையே
விந்துவும் நாதமும்
பார்த்து கேட்டபின் பாதமே

பாதமே
திருவடியே ஆன்மாவே
பற்றினால் கிட்டுமே பேரின்பம்

பேரின்பம்
சிற்றின்பம் அல்ல
பெருவிரலை உறுதியாக பற்றே

பற்றே
சந்திர சூரியனை
சக்தி சிவத்தை கண்களை

கண்களை
பெற்றிருந்தும் குருடரே
கண்மணி அறியாத மானிடரே

மானிடரே
மண்ணில் பிறந்தது
நல்ல வண்ணம் வாழவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts