சனி, 20 ஆகஸ்ட், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 1


உலகம்
என்னையும் ஏற்றது
அன்னையும் தந்தையும் பெற்றதால்

பெற்றதால்
பேணி வளர்த்தனர்
என்னையும் வளர்த்தான் இறைவனே

இறைவனே
என்னுள் இருக்கிறான்
நான் எங்கே இருக்கிறேன்

இருக்கிறேன்
இறைவன் அம்சமாக
சீவன் என்று அறியலாமே

அறியலாமே
சீவன் இருப்பிடத்தை
முயன்று பார்த்தால் முடியும்

முடியும்
அறிவுள்ளோர் நம்பிக்கை
ஆன்றோர் அறிவித்ததை பாரே

பாரே
போற்றும் பேரறிவாளர்
பண்பு உரைத்ததை படியே

படியே
சாத்திரத்தில் சிறந்தது
திருமந்திரம் திருமூலர் அருளினாரே

‪அருளினாரே
தோத்திரத்தில் சிறந்தது
திருவாசகம் மாணிக்க வாசகரே

வாசகரே
பாத்திரத்தில் சிறந்தது
திருவருட்பா இராமலிங்க சுவாமிகளே

சுவாமிகளே
சிந்தையை தெளிவிப்பது
சித்தர்கள் அருளிய பாடல்களே

பாடல்களே
பாடினால் பரவசமே
சரியை பக்தி நிலையாம்

நிலையாம்
பூசைகள் செய்வதுமே
கிரியை என்றே கூறுவர்

கூறுவர்
பிராணாயமமே உயர்ந்தது
யோகம் இதுதானே

இதுதான்
என அறியும் அறிவேயாம்
ஞானம் இவ்வளவே பூரணம்

பூரணம்
தன்னை அறிந்தாலே
தலைவனை அறியலாம் சத்தியம்.

#‎ஞானசற்குரு‬

ஜோதி ஐக்கூ அந்தாதி - 2  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts