ஞாயிறு, 15 டிசம்பர், 2024

பக்தி வேண்டும்!

 ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன்,

வைராக்கியத்துடன்,தவம் செய்ய வேண்டும் ! பக்தி,யாரிடமாவது காட்டு! 
அப்போது தான்,நீ பண்படுவாய்! பக்தியில்லையேல், ஞானம் இல்லை !
குருவிடம் பக்தி செலுத்து ! உருப்படுவாய்! எப்படியோ,
பக்தி வேண்டும்! அதுதான், உனக்கு பணிவை கொடுக்கும்!
ஒழுக்கத்தை கொடுக்கும்! நல்ல நெறியோடு வாழ்வாய்!
இறைவனின் பெரும் புகழை, மனமுருகி பாடு! ஆடு!
👁️🔥👁️ இறைவனைப் பற்றி, உலகுக்கு எடுத்துக்கூறு !
✨ஞான தானம் செய்!✨
இறைவன்- ஒவ்வொரு மனித உடலிலும், உயிராகவே ஆத்ம 
ஜோதியாகவே தங்கஜோதியாகவே அருட்பெருஞ்ஜோதியாகவே 
துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு, இதுவே ஞானதானம் ! 
இதை விளக்கும், மெய்ஞ்ஞான நூற்களை தானம் செய்!

ஞானம் பெற விழி - பக்கம் 66,67.
உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

வள்ளலார் உரைத்த ஞானம்


சாகாதவரே சன்மார்க்கி

உலகமக்கள் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே! பசித்திரு! தனித்திரு! விழித்திரு ஞானம் பெறலாம்! கடவுள் ஒருவரே! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! சிறு தெய்வ வழிபாடு கூடாது! மூடநம்பிக்கை ஆகாது! தெய்வங்கள் பெயரால் உயிர்பலி கூடவே கூடாது!

முடிந்தவரை அன்னதானம் செய்! ஞானதானம் செய்! எக்காரணங் கொண்டும் மாமிசம் சாப்பிடக் கூடாது! புகை, மது போன்ற போதை பழக்கம் கூடவே கூடாது! சாதி, மதம், இனம், மொழி, சமயம் முதலியன கூடாது! எக்காரியத்திலும் பொதுநோக்கம் வேண்டும்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! உயிர் இரக்கமே உண்மையான இறைவழிபாடு! உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாடு வேண்டும்! தன்னை அறிய ஜீவகாருண்ய ஒழுக்கம் வேண்டும்! ஞான குருவை பணிந்து உபதேசம் தீட்சைப் பெறு!

இதனை கடைபிடிப்பவரே மோட்சம் பெறுவர்! நம் கண்களே இறைவன் திருவடி!

-ஆன்ம நேய ஒருமைப்பாடு
May be an image of 2 people, temple and text
Like
Comment
Send
Share


ஞாயிறு, 24 நவம்பர், 2024

மனிதன் என்பவன் யார்?

 மனிதன் என்பவன் யார்?

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக போற்றுபவன் மனிதன்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று உணர்ந்து தொழுபவன் மனிதன்.
இணையாக உள்ள திருவடியை அறிந்து சாதனை செய்து வருபவன் மனிதன்.
ஈடில்லா இறைவனை அடைய விடாது தவம் செய்பவனே மனிதன்,
உலக மக்களனைவரையும் தன்னைப்போல் கருதுபவனே மனிதன்.
ஊன்றியிருந்து உள்ளே உறைபவனை தேடுபவனே மனிதன்.
எட்டும் இரண்டும் அறிந்து உணர்ந்து எட்டாமிடம் இருப்பவனே மனிதன்
ஏகாந்தவெளியிலே ஏகாந்தமாய் திரிபவனே, இருப்பவனே மனிதன்.
ஐந்தும் ஒன்றான விந்தையை பார்த்து அதன்கண் இருப்பவனே மனிதன்.
ஒளி ஒன்றே உள்தெளிவார்க்கு என உணர்ந்தவனே மனிதன். ஓங்காரமே உலகாழும் பரம்பொருள் என உரைப்பவனே மனிதன்.
ஒளஷதம் நீயே என இறைவனை சரணடைபவனே மனிதன்.
இப்படி மனிதனை நாம் அடையாளம் காணலாம். மனதை இதம் செய்ய தெரிந்தவனே மனிதன். மனம்போன போக்கில் போகாமல், நல்வழி செல்பவனே மனிதன்.
(அருள்மணி மாலை)


தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால்

 பிள்ளைச் சிறு விண்ணப்பம்

தடித்தஓர் மகனைத் தந்தை ஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனி ஆற்றேன்

பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனி ஆற்றேன்

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் பாமாலைகள் ஒவ்வொன்றும் ஞான அனுபவமே! இப்பாடல் உலகப்பொருள் இலகுவாக புரிந்துவிடும்! ஞானம்! நாம் நம் கண்மணி ஒளியை எண்ணி தவம் புரியும்போது, தந்தை பற்றிக்கொள்ளும்! தாயாகிய - வலது அதேபோல இடது கண் வீங்கி தடித்தால் வலது கண் அவ்வொளியை உணர்வை உள்வாங்கிக் கொள்ளும்தால் வலது, கருணைக்கடலே எனக்கு தந்தையும் நீ! தாயும் நீ! அம்மையப்பனான நீ எனக்கு உணர்வு மேலீட்டால் துன்பம் வராது சுகமாக இருக்க அருள்புரிவாயாக! என் கண்மணி ஒளியாக ஆடும் அம்பலவாணா வேதனை நீங்கி சுகமாக தவம் நிலவ அருள்புரிவாயாக!


குருவின் திருவடி சரணம் 

👁️🔥👁️

உண்ணாமுலை - அண்ணாமலை

''உண்ணாமுலை யுமையாளொடு

முடனாகிய வொருவன் -
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ -
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் -
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண மறுமே"

தேவாரம் பாடல் - 97

உண்ணாமுலை - திருமணமான பின்பு தானே தாயாகி தன் பிள்ளைக்கு முலைப்பால் ஊட்டுவாள் தாய்! ஆனால் உலகீன்ற அன்னை பராசக்தி பார்வதி உண்ணா முலையம்மன் என்றால் அவள் கன்னி என்றே பொருள். சிறு பெண் என்றே பொருள்! வாலை - பாலா குழந்தை என்றே பொருள்! 








ஒவ்வொருவரும் தன்னுள் இருக்கும் சீவனை காணுமுன் உள்ளே வாலையருளால் அமுதம் பெறுவார்கள்! சீவனை காண்பார்கள் சிவமாவார்கள்! வாலை அமுதம் உண்டவனே ஞானியாவான்! அந்த சீவனோடு சிவமும் சக்தியுமாய் இருக்கிறான் சிவம்! அந்த பெண்ணாகிய பெருமான் மலையென உயர்ந்து நிற்கிறான் மணி திகழ! கண்மணியில் திகழும் படியாக! அருவிகள் பாய விலங்குகள் அதிர மண்ணிலே சிறந்த மலை அண்ணாமலையாம்! 

அருவி பாய என்றது மலையென விளங்கும் கண்ணிலிருந்து தவத்தால் கண்ணீர் அருவியென கொட்டும். துர்குணங்களே துஷ்ட மிருகங்கள் எனப்பட்டது. காடும் மலையுமான இடம் கரடுமுரடான மலை நம் வினை சூழ்ந்த கண்ணே அண்ணாமலை! 

இந்த கண்ணிலே திருவாகிய இறைவன் ஒளியானவன் அண்ணாமலையான், உண்ணா முலையாளோடும் இருப்பதை அறிந்து உணர்ந்து தவம் செய்வார் பாவவினை தீரும் அக்னி மலையை உணர்ந்து தவம் செய்பவன் தன்னுள் அக்னியை பெருக்கி அருள் பெறுவான் ஞானம் அடைவான்! தன் வினையாவும் நீங்கப்பெறுவான்! தூயவனாவான்!

மூவர் உணர்ந்த முக்கண்
பக்கம் - 29,30.
உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥



🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥

"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே"

திருமந்திரம் - 138

இறைவனின் திருவடியே நமது கண்கள் !
சற்குரு உபதேசம் பெற்று தவம் செய்தால் நம் உள்ளம் புரிந்து கொண்டால் நம் கண்களே சிவமாகிய ஒளி உள்ளது என தெளிவாக உணரலாம் ! தேறிட்டாம்பா ! என நம் உறுதியை பார்த்து மற்றவர் கூற வேண்டும் !

திருவடியாகிய நம் கண்களே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்கு நம்மை அழைத்துச் செல்லுமாதலால் அதுவே சிவலோகம் அல்லவா ?

எப்படிபோகும் ? நாம் கண்ணில் மணியில் ஒளியை வைத்து சிந்தித்தால் அல்லவா செல்லும் !
மணியில் மனதை இருத்து !

திருவடியே நமக்கு கதி மோட்சம் தருவதாகும்.
திருவடி மூலமாகத் தானே சிவலோகம் சேரலாம் !
சேர்ந்து சிவ நடனம் காணலாம் ! கண்டால் தானே கதி மோட்சம் !
திருவடியே தஞ்சம் என பரிபூரண சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும் ! அதாவது வினைகளற்று பரிசுத்தமாகும் ! அழுக்காகிய மும் மலம் அகன்று ஆத்மா தெளிவாக துலங்கும் !

▪️எல்லாவற்றுக்கும் தேவை திருவடி !
▪️எல்லாம் பெற தேவை திருவடி !
▪️நாம் நாட வேண்டியது திருவடி !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

விதிப்படி வாழ்வதல்ல, மனித வாழ்க்கை !


விதிப்படி வாழ்வதல்ல,
மனித வாழ்க்கை !
விதியை வெல்லக் கூடியவன்தான்,மனிதன் !

நம்முடைய AIM,
நம்முடைய இலட்சியம் !
உயர்ந்ததாக இருக்கணும் !
நோக்கம் -
நல்லதாக இருக்கணும் !

இறைவனை அடையணும் !
நிச்சயமாக ,
குருமார்கள் - ஞானிகள்
காப்பாங்க !

எதுவா நடக்கட்டும் ! சாதனை,
தொடர்ந்துட்டே இருக்கணும் !

கர்ம வினை - உங்களை
போட்டு அலறடிக்கும்.

தாக்குப் பிடிக்கணும் !
வைராக்கியமாக இருக்கணும் !
இருந்தால், சாதிக்கலாம் !

👁️ஞான🔥சற்குரு👁️

புதன், 4 செப்டம்பர், 2024

சன்மார்க்க தெய்வம்

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 

தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி 

ஞான தவம் செய்வீர்!! ஞான தானம் செய்வீர்!! 

இறைவன் திருவடிகளே நம் கண்கள்

சன்மார்க்க தெய்வம் 


நம் இந்திய ஞான பூமியில் எண்ணிலடங்கா கோயில்கள் உள்ளன நாம, ரூப் வித்தியாசமாய் பற்பல கோயில்கள் நிறைந்துள்ளது. பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை காட்டும் என்பது முதுமொழி பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா  ஐயப்பன்சுவாமியே.


சபரிமலைக்கு செல்ல கடுமையான விரதம் இருக்க வேண்டும். முதலில் மக்களை ஒழுக்கமாக்குகிறது இந்த விரத முறைகள்! தூய பழக்க வழக்கம். எல்லோரையும் ஐயப்பனாகவே பாவிப்பது. எல்லோரும் ஒரே மாதிரி உடை, மாலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.


காலை மாலை இருவேளையும் புனித நீராடி கோயில் சென்றும் வீட்டிலும் இறைவனை பூஜை செய்து வழிபடுவது சுத்த சத்வ சைவ ஆகாரம் கொண்டு வாழ்வது விரத நாட்களில் பிரம்மச்சரியம் கடைபிடிப்பது. இப்படி மனிதனை மனிதனாக்கும் எல்லா நற்பண்புகளும் விரத நாட்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.


யாராக இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் எளிமையாக வாழ வேண்டும் மலை ஏறித்தான் ஆகவேண்டும். தலையிலே இருமுடிப்பபையை சுமந்துதான் ஆக வேண்டும். நெய் தேங்காய் கொண்டு போகணும்.


பண்பு - பணிவு - எளிமை - பக்தி - தொண்டு - அன்பு - இந்த நாட்களிலே வந்துவிடும்


எப்போதும் இருக்க வேண்டும் இப்படி என வலியுறுத்தவே இந்த விரத முறை! எல்லாமே ஞான தத்துவ விளக்கம்! 18 படி ஏறி ஐயப்பன் என்ற ஒரே நினைவோடு வர வேண்டும். அப்போதுதான்காண முடியும்! அங்கே காணப்போவது மகர ஜோதியை! எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண நம்மை நாம் தாயர் படுத்திக்கொள்வதே சபரிமலையாத்திரை.


அதற்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே விரதம். மனிதன் எப்படி வாழ 

வேண்டும்? குருவை பணிந்து அவர் வழிகாட்டுதலில் இறைவனை காண பயணப்படவேண்டும்.


இதுவே  சபரிமலை பயணத்தில் முக்கியமானது.


குருசாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும், குரு வழிகாட்ட மலை ஏறி ஜோதி ஸ்வருபனை காணலாம்! சகலரையும் ஒன்றாக்கி பார்க்கிறது சபரி மலை! எல்லோரும் ஐயப்பனே! இதுதானே சன்மார்க்கம்! சன்மார்க்கத்தை போதிக்கும் தெய்வமாக சபரிமலை தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமி விளங்குகிறார். அந்த சன்மார்க்க தெய்வ புகழ்பாடி அடியேன் மகிழ்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா!


எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே! 

நாம் எல்லோரும் அவர் பிள்ளைகளே இறைவன் தோதிஸ்வரூபன்! 

சரியாக விரதம் இருந்துதான் போகணும்! 

சிரமம் பாராது இறைவா என இருக்கணும்! 

நல்ல ஆகாரம் நல் ஒழுக்கம் வேணும்! 

எல்லோரையும் இறைவனாகவே கருதணும்! 

எந்த பேதமும் யாரிடமும் பார்க்கக் கூடாது!

சன்மார்க்கமே சபரிகிரீசன் வழி! 

வாழ்க சன்மார்க்க நெறி!



மனிதனாகுக!?


உண்பதும், உறங்குவதும், இனவிருத்தி செய்வதும் மட்டும்தான் மனிதனின் வேலையா மிருகங்களும் இதைத்தானே செய்கிறது! 

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! என ஒளவையார் கூறியது எதற்காக? அறிய வேண்டாமா? குறையின்றி நல்ல படியாக பிறந்த நாம் பிறவிப்பயனை அடைய வேண்டாமா பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்கா? பிறந்து செத்து! பிறந்து செத்து! இப்படியே போனால் அறிவு பகுத்தறிவு உள்ளவன் - மனிதன் என்று கூற முடியுமா?


மனிதன் என்பவன் யார்? மனதை இதம் செய்ய - பக்குவப்படுத்த தெரிந்தவனே மனிதன்; அதற்குத்தான் பகுத்தறிவு/ எப்படி பக்குவபடுத்துவது? இதை சொல்லித்தரும் குருவை தேடு| நாம் சாகப்பிறக்கவில்லை! வாழப்பிறந்திருக்கிறோம்! எப்படி வாழ வேண்டும்?


பஞ்சமா பாதகங்கள் பொய் கொலை களவு -கள் -காமம் புரியாது நல்ல பழக்க வழக்கம் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். மீன் முட்டை இறைச்சி உணவுகளை உண்ணாதே உடலை கெடுக்காதே.


மது புகை முதலிய போதை பொருட்களை உபயோகிக்காதே நோய்க்கு இடங்கொடேல்.


எல்லா உயிர்களிடமும் அன்பாயிரு!

எப்போதும் உண்மையே பேசு!

ஒருவனுக்கு ஒருத்தி என வாழு!

மண், பெண், பொருள் ஆசையை விடு!


இறைவன் திருவடியில் சரண் புகு! அப்போதுதான் நீ மனிதனாவாய்!!

இறைவன் திருவடியை சரண் அடைவதற்கு! நீ மனிதனாவதற்கு! உன்னையே நீ உணர்வதற்கு ஞானசற்குருவை 

சரணம் அடைந்து குரு உபதேசம் பெற்று தீட்சை பெற்று தவம் செய்தால் உனக்குள்ளே மகரஜோதியை காணலாம்.



கண்விழி கட கடவுளை காண்

இறைவன் திருவடிகளே நம் கண்கள்


கன்னியாகுமரி

தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்


ஆன்மீக செம்மல் ஞான சற் குரு சிவசெல்வராஜ் 


திங்கள், 5 ஆகஸ்ட், 2024

 🔥திருவடிப் புகழ்ச்சி - திருஅருட்பா🔥 


பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் 

   பதித்துவ பரோபரீணம்

பஞ்சகிர்த்திய சுத்த கர்த்தத்துவம் தற் 

   பரம் சிதம்பர விலாசம் 

பகர்சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதமம் 

   பராஅம்பர நிராலம்பனம் 

பரவு சாக்ஷாத்கார நிர் அவயவம் கற் 

   பனாதீத நிருவி காரம்


பரிபவ விமோசனம் - பரிபவம் + விமோசனம் அவரவர் பரிபக்குவத்திற்கு, வினைக்குதக்கபடி வாழ்வுக்கு தக்கபடி அமையும் நிலையிலின்று மீட்டு விமோசனம் உயர்வு கொடுப்பது நம் கண்மணியே ! 

குணரகிதம் - குணங்களின் தொடர்பு அற்றது ! 

விசுவம் - உலகம் ! 

பதித்துவம் - பதியாய் விளங்கும் தன்மை பெற்றது ! 

பரோபரீணம் - எண்ணிய உடனேயே உலகெங்கும் செல்லும் ஆற்றல் பெற்றது ! 

பஞ்சகிர்த்தியம் -படைத்தல் காத்தல் மறைத்தல் அருளல் அழித்தல் என்று இறைவன் தொழில் ஐந்து ! 

சுத்தகர்த் தத்துவம் - அனைத்தினுக்கும் கர்த்தாவான சுத்தபரம்பொருள் ! 

தற்பரம் - பரம்பொருளைவிட மேலானது இல்லை ! 

சிதம்பர விலாசம் - சின்ன இடத்தில் மேடையில் துலங்கி விளங்குவது ! வெளியிலே ஒளி !

பகர்சுபாவம் - தானாக சுயமாக தோன்றி துலங்கும் ஒளி எல்லோரும் சொல்வது ! 

புனிதம் - பரிசுத்தம் - தூய்மை ! 

அதுலம் அதுலிதம் - அது - பரம்பொருள் எதோடும் ஒட்டாதது. அது எதற்கும் ஒப்புமாகாது ! 

அம்பராம்பரம் - ஆகாயத்தையும் தன்னுள் கொண்ட அகண்டவெளி ! 

நிராலம்பனம் - நிர் + ஆலம்பனம் எவ்வித பற்றும் ஆதாரமும் இல்லாதது ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதாரமானது ! 

பரவுசாக்ஷாத்காரம் - சும்மா இருந்தால் சாக்ஷாத் அந்த பரம் பொருளையே நம்முன் எங்குமாய் பரந்து இருப்பதை காணலாம் ! 

நிர்அவயவம் - நம்போல் உருவம் அவயவங்கள் இல்லாதது ! ஒளிக்காட்சி ! 

கற்பனாதீதம் - கற்பனைக்கு எட்டாதது ! 

நிருவிகாரம் - விருப்புவெருப்பு அற்றவன் விகாரம் ஆசை அற்றவன் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 

 - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா 

 www.vallalyaar.com

ஞாயிறு, 28 ஜூலை, 2024

எட்டு எட்டு வருடமாக பிரித்து வைத்தனர்???

 நமது முன்னோர்கள் நம் வாழ்வை எட்டு எட்டு வருடமாக பிரித்து வைத்தனர். 

முதல் எட்டில் இரண்டாம் எட்டில் கல்வி, மூன்றாம் எட்டில் திருமணம், நாலாம் எட்டில் பிள்ளைபேறு, ஐந்தாம் எட்டில் சம்பாத்தியம், இப்படியே 8 எட்டாக நம் வாழ்க்கையை பிரிப்பதற்கு காரணம் எட்டில் தான் நம் உயிர் ஜீவன் ஆத்மா இருப்பதை உணர் வேண்டும் என்பதற்காகத்தான்! இது நம் அறிவுக்கு எட்ட வேண்டும் என பல்வாறாக உபதேசித்தார்கள் நாம் அதை எட்டிப் பிடிக்க வேண்டும். 

அது நம் கருத்துக்கு எட்ட வேண்டும் இதுவே வாழ்க்கை. 

எண் எட்டில் - எட்டுஎட்டில் - 64 வயதில் கண்டிப்பாக ஒவ்வொருவரும்  இறை அனுபவத்தில் திழைக்க வேண்டும் என்பதே நம் ஆன்றோர் வாக்கு. அதற்குள் உன் கடமைகளை முடித்துவிடு. 60 வயதுக்கு மேல் இறைவனை உணர தவம் செய்வதைத்தவிர வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது! இதுவே நமது இந்திய கலாச்சாரம். 8, எட்டு என நம் ஞானிகள் எல்லோரும் கூறுவது,  எட்டும் இரண்டும் என கூறுவது, 'எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்"  என ஔவையார் கூறி விளக்குகிறார். 

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் இதையே கூறியிருக்கிறார். 

எண்ணும் 8-ம், 2-ம் தமிழ் எண் அ, உ ஆகும். எழுத்தாகவும் உள்ள அ இரு கண்கள். - உ இரண்டும் இரு கண்கள்.


ஞான சற்குரு  சிவசெல்வராஜ் அய்யா 

www.vallalyaar.com 



புதன், 26 ஜூன், 2024

நம் கண்களில் உறையும் ஜோதியை

🔥திருமந்திரம் 20🔥


"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த

அடிகள் உறையும் அறனெறி நாடில்"



ஞானவிளக்கம் :

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த :


ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும் ? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன் ! இதுவே தேவ இரகசியம் !

நாம் என்று ? எங்கு ? யாருக்கு ? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார் ?

அடிகள் உறையும் அறனெறி நாடு :

அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன.

அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம் !

கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

வியாழன், 13 ஜூன், 2024

🔥திருமந்திரம் 1682 - ஞானவிளக்கம்🔥

 🔥திருமந்திரம் 1682 - ஞானவிளக்கம்🔥

"தாய்முலையாவது அறியார் தமருளோர்"


நம்மை பெற்றெடுத்த தாய், பிறந்தவுடன் நமக்கு பால் தந்து சீராட்டி அருமையாக வளர்த்தாள் ! 

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி நமக்கு அமுதம் தந்து இறைவனிடம் சேர்ப்பிப்பாள் இறைவி ! 

உலகத்து உயிர்க்கெல்லாம் தாயே அந்த இறைவி ! வாலை ! தாய் ! 

அந்த தாய் இருப்பது நம் சிர நடு உள் !      அக்னி கலை - ஜீவஸ்தானம் ! 

"உச்சிக்கு கீழே அண்ணாக்கின் மேலே," அமுதம் சொட்டும் ! 

      அப்படியானால் அங்கேயும் தமர் - ஓட்டை உள்ளதல்லவா ? அதுவே தாய் மார்பு ! உருவகம் - பரிபாஷை ! மார்பிலிருந்து அமுதம் வரும் ! 

நாம் நம் இரு கண்மணி ஓட்டை வழியே தவம் செய்து வருங்கால் மணியிலுள்ள ஒளி பெருகி ஓட்டை வழி உள் சென்று ஜீவஸ்தானத்தை அடையும் ! "அந்தக் கரு விந்து நாதம்"! தாய் இருப்பிடம் ! 

தாய் அமுதூட்டி தந்தையிடம் அனுப்பிவைப்பாள் ! 

    இந்த அமுதம் சாப்பிட்டவர் வினையகன்று மரணமிலாது பேரின்பம் பெறுவர் ! சீரஞ்சீவியாக வாழ்வர் ! பசிதாகம் அற்றுப்போகும் ! காயசித்தி பெறுவர் ! அழியாத உயிரைப் போல உடலும் அழியாத ஒளித்தன்மை பெறுவர். 

தாய்ப் பால் குடித்து வளரும் பிள்ளையே தவராஜ சிங்கமாகும் ! ஞானியாவான் ! சித்தனாவான் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

புதன், 24 ஏப்ரல், 2024

எல்லோர் உள்ளிலும் இறைவன் இருக்கிறான் !



"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்"

அன்னதானம், பசித்த யாராயினும் அவர் யார் என விசாரியாமல் பசிக்கு உணவு கொடுக்கணும் ! சுத்த சைவ உணவையே வழங்க வேண்டும்.

பணக்காரனும் பசிக்கு சோறுதானே சாப்பிட வேண்டும் பணத்தையா சாப்பிடுவான் !
எல்லோருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கு உணவு கொடுங்கள் !

ஜீவனுக்கு கொடுக்கும் உணவு சிவனுக்கே வழங்கும் நைவேத்தியமே !

அன்னதானத்தை விட மேலானது ஞானதானம் !

ஞானதானம் யார்க்கும் சொல்லலாம் ! பாவி துஷ்டன் ஆண் பெண் என்றெல்லாம் பார்க்க வேண்டாம் !

எல்லோர் உள்ளிலும் இறைவன் இருக்கிறான் ! உள்ளிருக்கும் சிவனை ஒவ்வொரு ஜீவனுக்கும் உணர்த்துங்கள் ! இதுவே ஞானதானம் !

தானத்தில் சிறந்தது ஞானதானமே !

" அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்றல்லவா !"

என்ன எழுத்து ' அ ' ' உ ' என்ற எட்டையும் இரண்டையுமே !
இதுவே ஞான எழுத்து ! ஞானம் தரும் எழுத்து ! நம் தலை எழுத்தை மாற்றும் எழுத்து ! ஜீவனை சிவனாக்கும் எழுத்து !  லட்சம் பேர்களுக்கு சோறு போடுவதை விட ஒரு மனிதன் ஆத்ம ஞானம் பெற ஞானதானம் செய்வதே சாலச் சிறந்தது !! அடியேன் இங்ஙனம் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஞானதானம் செய்துள்ளேன். இறைவன் அருள்கிறான் அடியேன் தானம் செய்கிறேன் ! 

அடியேனுக்கு இந்த ஜீவனை சிவனாக்கும் வேலை மட்டுமே !

வேறு வேலை கிடையாது !
சோம்பி இருக்கிறேன் !
சும்மா இருக்கிறேன் !

எனவே தான் அழைக்கிறேன் யாராயினும் வரலாம் ஞானதானம் பெறலாம் !
கன்னியாகுமரி வருக ! அருள் பெறுக !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

திங்கள், 8 ஏப்ரல், 2024

தோணி போல் காணு மடா அந்த வீடு

🔥திருமந்திரம் 1554 - ஞானவிளக்கம்🔥

"அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி"

நம் கண்ணே "தோணி" என்கிறார் !

தோணி போல் காணு மடா அந்த வீடு என்கிறார் ஒரு சித்தர் !
திருமூலரும் அந்த வீடு கண்ணாகிய வீட்டை தோணி என்றே பரிபாஷையாக கூறுகிறார் !


குருதீட்சை பெற்று தெளிந்து அறிவாக கண்மணி ஒளியில் நிலைத்து தவம் செய்பவரே 
பெறுவர் ஞானம் !

தோணியிலே - கண்ணிலே ஏற்றும் கனல் உள்ளே ஆத்மஸ்தானத்தால் ஈர்க்கப்படும் !

அறிவு துலங்கும் ஆத்மஸ்தானம் அழைத்ததாக கூறுவது இந்நிலையே !

இப்போது தோணியில் வேண்டாத குப்பைகள் பெரும்பாரமாக இருக்கின்றது.

தோணி அக்கரையை அடைய வேண்டாத மும்மலக் குப்பை பாரத்தை கடலில் தூக்கி வீச வேண்டும் ! பாரம் இல்லையெனில் தோணியை விரைந்து ஒட்டி அக்கரையை அடையலாம் !

அக்கரை சேர மிகுந்த அக்கறை வேண்டும் !

அக்கரையில் அல்லவா இருக்குது ஆனந்தம் தரும் அமுதம் !

"இக்கரை கடந்திடில் அக்கரையே இருப்பது சிதம்பர சர்க்கரையே"
 என வள்ளலார் பாடி மகிழ்கிறார் ! தோணியில் ஏறித்தான் போக முடியும் !


சீர்காழியிலே கோயில் கொண்ட இறைவன் திருநாமம் தோணியப்பர் !
கண்ணே தோணி ! இறைவனையடைய உதவும் பிரயாணம் செய்ய தேவை !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

கண்ணன் அருள்பெறலாம்! ஸ்ரீபெரியாழ்வார்

 #வைகுண்டஏகாதசி : #ஸ்ரீபெரியாழ்வார்

🔥கண்ணன் அருள்பெறலாம்!🔥

"அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!"
காயாம் பூ வண்ணம் கொண்டாய்".

- (பாடல் 249)

அழகிய ஒளியுடைய சக்கராயுதத்தை கையில் தரித்திருப்பவனே ! அழகனே !

இந்த உலகத்தில் எது அழகு ?

பெண்களா ?
இயற்கையா ?
அடுக்கு மாடி கட்டிடமா ?
கோபுரமா ?
சிற்பமா ?
சிலையா ?
யார் ? எது ? தெரியுமா ?

இந்த உலகத்திலேயே அழகு பேரழகு ஒளி தான் !! ஜோதியே அழகு !

விளக்கு நிறைய ஏற்றுங்கள் அதுதான் பேரழகு ஜோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே என அதன் அழகில் லயிக்காத ஞானியே யில்லை எனலாம் !

ஒளியே அழகு ஒளிமிகுந்த கண்ணன் கையில் ஒளியான சக்கராயுதம் ! அழகுக்கு அழகு !

நமது வலது கண்ணே சக்கரம்.
இடது கண் சங்கு !

இடது கண் ஒலி - வலதுகண் ஒளி !

ஐம்பூதங்களும் ஒருங்கே அமையப் பெற்ற கண்ணில் ஐம்பூதமே அஞ்சுடர் ! வலக்கையில் வலது கண்ணில் அஞ்சுடர் ஆழி - சக்கராயுதம் !

ஒருசமயம் கண்ணன் சிவனை 1008 மலர்களால் பூஜிக்க முனைந்த போது ஒரு பூ குறைந்ததாம் !

1007 மலரை சிவன் திருவடியில் சமர்ப்பித்தாயிற்று !!
இன்னும் ஒரு மலருக்கு எங்கே போவது ?

கண்ணன் என்ன செய்தான் தெரியுமா ?

தன் கண்மலர் ஒன்றையே எடுத்து 1008வது மலராக சிவனின் திருவடியில் சார்த்தி வணங்கினான் அகமகிழ்ந்த சிவன் சக்கராயுதத்தை மகா விஷ்ணுக்கு வழங்கினார் !

கண்மலரையே இறைவனுக்கு அர்ப்பணித்ததால் அக்கண்ணே, வலதுகண்ணே சக்கராயுதமாம் ! கண்ணை சமர்ப்பித்ததால் மகா விஷ்ணுவே கண்ணனாம் ! புராணமே ஞானம் !

சரியான குருமூலம் சரியாகபொருள் அறிந்து தவம் செய்து நீங்களும் கண்ணன் அருள்பெறலாம் !

கண்ணன் சிவனுக்கு சமர்ப்பித்த கண்மலர் காயாத மலர் ! வாடாத மலர் ! காயாம் பூ !

அந்த காயாம் பூ கண்மணி நிறத்தவனே கண்ணன் ! 
அதன் மத்தியிலே ஊசிமுனை அளவு ஒளியாக திகழ்கிறான் !

#கிருஷ்ணமணி ! #கண்மணி ! #கண்ணன் ! #கிருஷ்ணன் ! #மணிவண்ணன் !
அவனே #திருமால் ! #மகாவிஷ்ணு ! #புருஷோத்தமன் ! #பார்த்தசாரதி ! #பரந்தாமன் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
#பெரியாழ்வார் #மலரடி போற்றி !!
#வள்ளலார் #திருவடி போற்றி !!
#ஞானசற்குரு #சிவசெல்வராஜ் அய்யா
#vallalar #meditation #thiruarutpa
www.vallalyaar.com

Popular Posts