ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

கண்ணன் அருள்பெறலாம்! ஸ்ரீபெரியாழ்வார்

 #வைகுண்டஏகாதசி : #ஸ்ரீபெரியாழ்வார்

🔥கண்ணன் அருள்பெறலாம்!🔥

"அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!"
காயாம் பூ வண்ணம் கொண்டாய்".

- (பாடல் 249)

அழகிய ஒளியுடைய சக்கராயுதத்தை கையில் தரித்திருப்பவனே ! அழகனே !

இந்த உலகத்தில் எது அழகு ?

பெண்களா ?
இயற்கையா ?
அடுக்கு மாடி கட்டிடமா ?
கோபுரமா ?
சிற்பமா ?
சிலையா ?
யார் ? எது ? தெரியுமா ?

இந்த உலகத்திலேயே அழகு பேரழகு ஒளி தான் !! ஜோதியே அழகு !

விளக்கு நிறைய ஏற்றுங்கள் அதுதான் பேரழகு ஜோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே என அதன் அழகில் லயிக்காத ஞானியே யில்லை எனலாம் !

ஒளியே அழகு ஒளிமிகுந்த கண்ணன் கையில் ஒளியான சக்கராயுதம் ! அழகுக்கு அழகு !

நமது வலது கண்ணே சக்கரம்.
இடது கண் சங்கு !

இடது கண் ஒலி - வலதுகண் ஒளி !

ஐம்பூதங்களும் ஒருங்கே அமையப் பெற்ற கண்ணில் ஐம்பூதமே அஞ்சுடர் ! வலக்கையில் வலது கண்ணில் அஞ்சுடர் ஆழி - சக்கராயுதம் !

ஒருசமயம் கண்ணன் சிவனை 1008 மலர்களால் பூஜிக்க முனைந்த போது ஒரு பூ குறைந்ததாம் !

1007 மலரை சிவன் திருவடியில் சமர்ப்பித்தாயிற்று !!
இன்னும் ஒரு மலருக்கு எங்கே போவது ?

கண்ணன் என்ன செய்தான் தெரியுமா ?

தன் கண்மலர் ஒன்றையே எடுத்து 1008வது மலராக சிவனின் திருவடியில் சார்த்தி வணங்கினான் அகமகிழ்ந்த சிவன் சக்கராயுதத்தை மகா விஷ்ணுக்கு வழங்கினார் !

கண்மலரையே இறைவனுக்கு அர்ப்பணித்ததால் அக்கண்ணே, வலதுகண்ணே சக்கராயுதமாம் ! கண்ணை சமர்ப்பித்ததால் மகா விஷ்ணுவே கண்ணனாம் ! புராணமே ஞானம் !

சரியான குருமூலம் சரியாகபொருள் அறிந்து தவம் செய்து நீங்களும் கண்ணன் அருள்பெறலாம் !

கண்ணன் சிவனுக்கு சமர்ப்பித்த கண்மலர் காயாத மலர் ! வாடாத மலர் ! காயாம் பூ !

அந்த காயாம் பூ கண்மணி நிறத்தவனே கண்ணன் ! 
அதன் மத்தியிலே ஊசிமுனை அளவு ஒளியாக திகழ்கிறான் !

#கிருஷ்ணமணி ! #கண்மணி ! #கண்ணன் ! #கிருஷ்ணன் ! #மணிவண்ணன் !
அவனே #திருமால் ! #மகாவிஷ்ணு ! #புருஷோத்தமன் ! #பார்த்தசாரதி ! #பரந்தாமன் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
#பெரியாழ்வார் #மலரடி போற்றி !!
#வள்ளலார் #திருவடி போற்றி !!
#ஞானசற்குரு #சிவசெல்வராஜ் அய்யா
#vallalar #meditation #thiruarutpa
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts