வியாழன், 13 ஜூன், 2024

🔥திருமந்திரம் 1682 - ஞானவிளக்கம்🔥

 🔥திருமந்திரம் 1682 - ஞானவிளக்கம்🔥

"தாய்முலையாவது அறியார் தமருளோர்"


நம்மை பெற்றெடுத்த தாய், பிறந்தவுடன் நமக்கு பால் தந்து சீராட்டி அருமையாக வளர்த்தாள் ! 

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி நமக்கு அமுதம் தந்து இறைவனிடம் சேர்ப்பிப்பாள் இறைவி ! 

உலகத்து உயிர்க்கெல்லாம் தாயே அந்த இறைவி ! வாலை ! தாய் ! 

அந்த தாய் இருப்பது நம் சிர நடு உள் !      அக்னி கலை - ஜீவஸ்தானம் ! 

"உச்சிக்கு கீழே அண்ணாக்கின் மேலே," அமுதம் சொட்டும் ! 

      அப்படியானால் அங்கேயும் தமர் - ஓட்டை உள்ளதல்லவா ? அதுவே தாய் மார்பு ! உருவகம் - பரிபாஷை ! மார்பிலிருந்து அமுதம் வரும் ! 

நாம் நம் இரு கண்மணி ஓட்டை வழியே தவம் செய்து வருங்கால் மணியிலுள்ள ஒளி பெருகி ஓட்டை வழி உள் சென்று ஜீவஸ்தானத்தை அடையும் ! "அந்தக் கரு விந்து நாதம்"! தாய் இருப்பிடம் ! 

தாய் அமுதூட்டி தந்தையிடம் அனுப்பிவைப்பாள் ! 

    இந்த அமுதம் சாப்பிட்டவர் வினையகன்று மரணமிலாது பேரின்பம் பெறுவர் ! சீரஞ்சீவியாக வாழ்வர் ! பசிதாகம் அற்றுப்போகும் ! காயசித்தி பெறுவர் ! அழியாத உயிரைப் போல உடலும் அழியாத ஒளித்தன்மை பெறுவர். 

தாய்ப் பால் குடித்து வளரும் பிள்ளையே தவராஜ சிங்கமாகும் ! ஞானியாவான் ! சித்தனாவான் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts