செவ்வாய், 13 டிசம்பர், 2022

அனைத்துக்கும் மூல ஆதாரமே மெய்ப்பொருள்


சாகாக்கல்வி நூலிலிருந்து : 38

🔥 ஞானிகள் கூற்று ! 🔥


"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்". அவரவர் கையால் அளந்தால் அவரவர் உடம்பு எட்டு சாண் அளவே இருக்கும் ! இதில் தலை ஒரு சாண்.

நம் உடம்புக்கு தலையானது - முக்கியமானது, தலையே - சிரசே !
முக்கியமான - பிரதானமான இடத்தில் தானே தலைநகரத்தில் தானே தலைவர் இருப்பார். தலையில் இருப்பதால் தான் - தலைபோல் இருப்பதால் தான் தலைவர்.
நம் தலைவர் இறைவன் நம் மெய்யில் முக்கியமான, தலையில் இருக்கிறார்.

இறைவன் - பரம்பொருள் நம் உயிராக, பிராணனாக, ஜீவனாக நம் தலையின் உள் மத்தியில் பத்திரமாக இருக்கிறார். பாத்திரமாக நம் மெய் உடல் இறைவனை - நம் உயிரை தாங்கிக் கொண்டிருக்கிறது!

உயிர் தங்கிய சற்பாத்திரம் நம் உடலில் நேத்திரத்தில் துலங்கி நிற்கிறது !

அதுவே மெய் ! அதுவே மெய்ப்பொருள் !

நமது மெய்யில் எழுபத்தீராயிரம் நாடிகள் உள்ளது இது மெய் ! ஞானிகள் கூற்று !

அனைத்தும் தொடர்புடைய இடம் உயிர்ஸ்தானம் ! மெய்ப்பொருள் !

ஏழு ஆதாரம் நமது மெய்யில், அனைத்துக்கும் மூல ஆதாரமே மெய்ப்பொருள் !

பஞ்சபூத கூட்டுறவால் ஆனது இப்பிரபஞ்சமே ! நம் மெய்யும் பஞ்சபூத கூட்டுறவே ! இதுவும் மெய்யே !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts