செவ்வாய், 20 டிசம்பர், 2022

தவம் செய்வோர் தப்புவர்!



சாகாக்கல்வி நூலிலிருந்து : 39

🔥 தவம் செய்வோர் தப்புவர்! 🔥


இரத்தம், எலும்பு, சதை மஜ்ஜையால் ஆன இந்த மெய், தாயின் கருவில் முதலில் தோன்றும் கண்ணால் அதன் ஒளியால் வெதுப்பி வெதுப்பி தோன்றி பிண்ட உற்பத்தி பூரணமாகிறது !

மூன்று மாதத்திற்கு பின் இறையருளால் உயிர் வந்து சேரும் !

உயிரும் உடலும் இணைந்து பூரணமாகி 10 மாதத்தில் 270 நாட்களில் ஜனனமாகிறது !

தாயின் உயிரை சார்ந்து கருவில் இருந்த நாம் திருவின் அருளால் தனித்து விடப்படுகிறோம் இவ்வுலகில் !

ஒன்றும் அறியா குழந்தையாக பிறந்த மனிதன் தான் பிறந்தது பிறப்பிக்கச் செய்தவனோடு ஒன்றிவிடத்தான் என உணர்ந்தால் !? பிழைத்தான் !!

ஒன்றும் அறிவை அறிய அறிவிக்கும் ஆசானை பணிந்து மெய்ப்பொருள் உணர்ந்து ஆன்றவிந்து அடங்கிட தவம் செய்வோர் தப்புவர் !

ஒன்றும், இரண்டிலே, எட்டாகிய இரண்டிலே வழிகண்டு ஊசிமுனை வாசல் வழி கண்டு போனாலே உய்யலாம் ! வாழலாம் ! பேரின்பம் பெறலாம் !

ஒன்றான இறைவனை இரண்டாக உள்ள மெய்ப்பொருளிலே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டற்று ஒன்றாகலாமே !

ஜீவன் முக்தராகலாமே !

ஒன்றே மெய்ப்பொருள் என இரண்டையும், கண் இரண்டையும் ஒன்றாக்கினால் உள்ளே, ஒளிரும் மூன்றாவது கண் ! துலங்கும் !


ஓங்காரமான அ, உ, ம் - சேர்ந்ததே. மூன்றாமிடம் - முப்பாழ் - லலாடம் - அக்னிகலை - அகக்கண் - ஞானக்கண் நெற்றிக்கண் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts