செவ்வாய், 6 டிசம்பர், 2022

மெய் எது ? சத்தியம் உடல்?


சாகாக்கல்வி நூலிலிருந்து : 37

🔥 மெய் எது ? 🔥

மெய் என்றால் உண்மை. சத்தியம். இன்னொரு பொருள் உடல்.

"தமிழ்மொழி தெய்வீகமானது.
அதிவிரைவில் சுத்த சிவானுபூதியை நல்க வல்லது"
என வள்ளல் இராமலிங்கர் பகிர்ந்துள்ளார் !
எப்படி எனில்,,

தமிழ் எழுத்துக்கள் உயிர் எழுத்து மெய்எழுத்து உயிர்மெய் எழுத்து என்றே உள்ளது.
உயிரான இறைவன் உடலான மெய்யில் இணைந்தாலே, உயிர்மெய் கூடி எழுத்தாகி சொல்லாகி பொருளாகிறது !

உயிரோடு கலந்தது தமிழ் என்பதே சரி 
மெய்யிலே உள்ள மெய் உயிரே ! மெய்யாகிய உடலிலே உள்ள சத்தியம் உயிரே ! மெய்யெழுத்து தனித்து இயங்காதே ! உயிர் எழுத்தோடு மெய்யெழுத்தும் சேர்ந்தே இயங்கும்.

உடல் மட்டும் மெய்மட்டும் தனித்தியங்காது. உடலோடு உயிரும் சேர்ந்தாலே இயக்கம் எட்டும் இரண்டும் எழுத்தாகி ஓங்கார சொல்லாகி மெய்ப்பொருளாக விளங்குகிறது !

சொற்சுவை பொருட்சுவை அனைத்தும் கலந்து சுந்தரத்தமிழில் அருட்பாக்கள் எண்ணிலடங்காதவை பாடியருளிய ஞானிகள் தமிழ் மண்ணிலே ஏராளம் ! ஏராளம் !

"தேவர் குறளும் திருநான் மறை முடியும்
மூவர் தமிழும் முனி மொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்".

திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகஸ்தியர் முதலான சித்தர்பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது

ஒரு வாசகம் !

மெய் ! உண்மை ! சத்தியம் !

அது மெய்ப்பொருள் !

ஆக தமிழில் உள்ள எல்லா நூற்களுமே, சங்க இலக்கியமாகட்டும், பக்தி இலக்கியமாகட்டும், இலக்கண நூலாகட்டும், காப்பியங்களாகட்டும், அருட்பாக்களாகட்டும் இவை அனைத்தும் உரைப்பது முடிவில் மெய்ப்பொருளே !

மெய்யிலே விளங்கும் பொருள் கண்மணி ஒளியே மெய்ப்பொருள் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts