திங்கள், 20 ஜூன், 2022

🔥திருவடி எது? 🔥

 🔥    திருவடி எது?    🔥

"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே"

     திருமந்திரம் - 138 

இறைவனின் திருவடியே நமது கண்கள் ! சற்குரு உபதேசம் பெற்று
தவம் செய்தால் நம் உள்ளம் புரிந்து கொண்டால் நம் கண்களே
சிவமாகிய ஒளி உள்ளது என தெளிவாக உணரலாம் ! 

தேறிட்டாம்பா ! என நம் உறுதியை பார்த்து மற்றவர் கூற வேண்டும் ! 

திருவடியாகிய நம் கண்களே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்கு
நம்மை அழைத்துச் செல்லுமாதலால் அதுவே சிவலோகம் அல்லவா ? எப்படிபோகும் ? 

நாம் கண்ணில் மணியில் ஒளியை வைத்து சிந்தித்தால் அல்லவா செல்லும் !
மணியில் மனதை இருத்து ! திருவடியே நமக்கு கதி மோட்சம் தருவதாகும். 

திருவடி மூலமாகத் தானே சிவலோகம் சேரலாம் ! சேர்ந்து சிவ நடனம் காணலாம் !
கண்டால் தானே கதி மோட்சம் ! 

திருவடியே தஞ்சம் என பரிபூரண சரணாகதியானாலே
நம் உள்ளம் தெளிவாகும் ! 

அதாவது வினைகளற்று பரிசுத்தமாகும் !
அழுக்காகிய மும் மலம் அகன்று ஆத்மா தெளிவாக துலங்கும் ! 


எல்லாவற்றுக்கும் தேவை திருவடி !
எல்லாம் பெற தேவை திருவடி !
நாம் நாட வேண்டியது திருவடி !


 இறைவன் திருவடிகளே நம் கண்கள்! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com



First Book of Guru 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts