திங்கள், 20 ஜூன், 2022

கண்மணி ஒளி - ஞானதவமே உயர்ந்த ஞான நிலை

 "ஒண்போதலர் கமலச் சிறுக்கால் உறைத்தொன்றும் நோவாமே
  தண்போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ!"
பாடல்-94















குட்டிக்கண்ணன் இளமையான கண்மணி, தனது குஞ்சுப்பாதங்களால் நடக்கையில் - தளர்நடை கால்நோவுமா?

நமது கண்மணியை நினைந்து ஞான தவம் இயற்றுகையில் வலிக்காது!

இதைத்தான் நமது திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளும்,

"நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவர்" எனப் பாடியுள்ளார். கண்மணி ஒளியை எண்ணி ஞானதவம் செய்வதே மேலானது. நோவாது நோன்பு நோற்பதாம்!

மற்றெல்லா யோகங்களும் தவங்களும் உடலை வருத்தி பலவிதமாக கஷ்டப்பட்டு செய்யும் பயிற்சிகளாகும், சித்தர்களும் ஞானிகளும் சைவ ஆச்சார்யர்களும் வைணவ ஆச்சார்யர்களும் சொன்ன இந்த கண்மணி ஒளியை எண்ணி செய்யும் ஞானதவமே உயர்ந்த ஞான நிலை பெற வழிவகுக்கும்,
துன்பமிலாது பேரின்பம் பெறும் ஒப்பற்ற ஞான மார்க்க மாகும்!

பரமபதம்
பக்கம்-38
குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts