வியாழன், 4 ஏப்ரல், 2024

உணர்வின் மூர்த்திதான் இறைவன்


🔥திருமந்திரம் 2938 - ஞானவிளக்கம்🔥

 
"உணர்வுடை யார்கட்கு உலகமுந் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண்டாரே"

 
சற்குரு மூலம் மெய்ப்பொருளில் - கண்களில் உணர்வுடையார் தவம் செய்து செய்து மேலும் மேலும் உணர்வை பெருக்கினால் அவர்கள் முன் முதலில் தோன்றுவது உலகம் ! உலகை பார்க்கின்ற கண்கள் உலகம் - பூமியைப் போல் இருக்கின்ற கண்மணி !

ஞானசாதனை செய்து உணர்வை பெருக்கியிருக்கின்றவர்களுக்கு மூவினைத்துயர் அற்றுப் போகும் ! 

தவசீலர்கள் உணர்ந்தபோதே, கண்ணில் உணர்வை பெருக்கி உள்சென்று ஆத்மாவை உணர்ந்த அப்போதே இறைவனை உணர்ந்தவர் யாவார் !

தன்னை உணர்ந்த அக்கணமே தான் ஆன இறைவனையும் உணர்வார்கள் காண்பார்கள் !

எப்போதும் உணர்வு இருந்தால் மரணம் இல்லை !

உணர்வு அற்றுப் போனால் தானே மரணம் !

எப்போதும் உணர்வு இருந்தால் ஒளி பெருகி ஜீவஜோதி பிரகாசிக்கும் !

ஊன உடலே ஒளி உடலாகும் !

அதன்பின் உயிர் பிரியாது ! சிரஞ்சீவியாவான் !

"உணர்வின் மூர்த்திதான் இறைவன்"

என நம்மாழ்வார் கூறுகிறார் !

"உதிக்கின்ற உச்சித்திலக உணர்வுடையார்"

என அபிராமிபட்டரும் அழகாக கூறுகிறார் !

"நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து"

என வள்ளலாரும் பாடியருள்கிறார் !

உணர்வோடிரு !

உன்னை நீ அறியலாம் !

பேரின்பம் பரவசம் பெறலாம் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

-ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts