🔥 கண்மணிமாலை 🔥
"சிற்றம் பலமுஞ் சிவனும் அருகிருக்க 
வெற்றம் பலந்தேடி விட்டோமே - நித்தம்
பிறந்திடத்தைத் தேடுதே பேதைமட நெஞ்சம்
கறந்திடத்தை நாடுதே கண்"
    - பட்டினத்தார் 
ஆன்மாக்களே, 
     இந்நூலை நீங்கள் சரியாக படித்து உணர்ந்திருப்பீர்களானால் இந்தப் பாடலுக்குரிய ஞான விளக்கத்தை சரியாக புரிந்து கொள்வீர்கள் ! அதை விடுத்து இந்தப்பாடலை ஆபாசமாக நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இது எதுவுமே புரியவில்லை என்று பொருள். 
சிந்தித்துப் பாருங்கள். 
 சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க - 
     சிற்றம்பலமாகிய கண்ணும் அதில் ஒளியாக நின்றிலங்கும் சிவனும் அருகிருக்க, 
 வெற்றம்பலந்தேடி விட்டோமே - 
     ஒன்றுமில்லாத வெருமையான வெளியிடங்களை தேடிவிட்டோமே ; 
 நித்தம் பிறந்திடத்தை தேடுதே பேதை மட நெஞ்சம் - 
     நம் பேதை மனம் தினமும் நாம் பிறந்த இடத்தை தேடுகிறது. 
நாம் பிறந்த இடம் எது ? 
நாம் ஜீவாத்மாக்கள் அல்லவா ? நாம் பரமாத்மாவிலிருந்துதானே பிறந்தோம் ! நமது பேதை மனது தினமும் நாம் பிறந்த இடமாகிய பரமாத்மாவையே தேடுகிறது எனக் கூறுகிறார் ! 
கீழான இடத்தை நினைக்காதீர்கள். 
 கறந்திடத்தை நாடுதே கண் - 
     நமது கண்கள் சூரியனும் சந்திரனும் ஆகும் அல்லவா ? இந்த இரு ஒளிக்கலைகளும், அகமுகமாக அக்னி கலையோடு கூடும்போது நாம் நம் ஜீவனை ஒளியாக நம் முன்னே காணலாம் !  நாதத்தொனி கேட்கலாம் ! 
     பின்னர் நமக்கு இறைவன் பிரசாதமாக சகஸ்ராராரத்திலிருந்து அமுதம் சொட்டும். அந்த மங்காத பால் கறக்கும் இடத்தையே நமது கண் நாடுதே என பட்டினத்தார் கூறுகிறார்.  எவ்வளவு உயர்ந்த ஞானம் ! 
தவறாக பொருள் கொண்டு மோசம் போகாதீர்கள். எல்லா ஞானவான்களும் மிக உயர்ந்த பொருளையே - இறைவனையே - அடையும் வழியையே கூறுகின்றனர். 
எனவே,,, 
 "மெய்ப்பொருளை" உணருங்கள் ! 
 "திருவடியை" சரணடையுங்கள் ! 
 "கண்மணிமாலை" யைப்பற்றி கனிந்து நில்லுங்கள் ! 
 மரணமிலா பெருவாழ்வு வாழலாம் ! 
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !" 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 இறைவன் திருவடிகளே நம் கண்கள் ! 
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com