ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சிதம்பரத்தில் நடராஜர் ஆடுவதை நிறுத்தினால் உலகம் அழிந்து விடும் ???


சிதம்பரத்தில் நடராஜர் ஆடிக் கொண்டு இருக்கிறார். அவர் ஆடுவதை நிறுத்தினால் இந்த உலகம் அழிந்து விடும் என இன்றும் ஊரில் பலர் சொல்லிக்கொண்டேஇருக்கிறார்கள்!?
சிதம்பரம் போனேன் அங்கே நடராஜர் ஆடவில்லையே!

அப்படியானால் இதன் விளக்கம் யாது? சிதம்பரம் என்றால் சின்ன-அம்பலம் - அம்பரம்,சிற்றம்பலம், நடராஜன் நடனமிடும் - ராஜன் - இறைவன் - பேரொளியின் அம்சம் சிற்றொளி -ஒளி ஆடிக்கொண்டு தானே இருக்கும்.

அதாவது எங்கும் நிறைந்த இறைவன் நம் உடலில் சின்ன அம்பலாகிய எல்லோருக்கும் தெரியும்படியாக அம்பலமாக கண்ணில் ஒளியாகி ஆடிட் கொண்டிருக்கிறான் என்பதாகும்.

நம் கண்ணில் ஒளி ஆடிக்கொண்டிருந்தது. நம் கண் எப்போது ஆடாமல் அசையாமல் நிலைகுத்தி நிற்கும்? இறந்தால் தானே! கண் ஒளி ஆடாமல் இருந்தால் உயிர் பிரிந்து விட்டது என்று தானே பொருள். கண் அசைவு ஆட்டம் இருந்தால் உயிர் இருக்கிறது
என்று பொருள்.

இதைத்தான் நம் கண்ணில் ஆடிக்கொண்டிருக்கும் ஒளி நின்றால் நாம்
இறந்து விடுவோம் என்பதைத்தான் சிதம்பரத்தில் நடனமிடும் நடராஜர் ஆட்டம் நின்று விட்டால் உலகம் அழிந்து விடும் என பரிபாசையாக மறைமுகமாக சொன்னார்கள் முன்னோர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts