சனி, 12 மார்ச், 2016

குருவை பெறுவது எவ்வளவு முக்கியம்

கிருஷ்ண பகவானும் ஸ்ரீ ராமனுமே  குருவை தேடிபோய் உபதேசம் பெற்றார்கள் என புராணம் படித்திருக்கிறோமே? அவதாரம் கூட குருவை அவசியம் பெறவேண்டும் என நமக்கு உணர்தத்தானே! அவதாரம் கூட குருவை பெறவேண்டும் என்றால் நாம் சாமானியன் குருவை பெறுவது எவ்வளவு முக்கியம்! தகுந்த ஆச்சாரியன் மூலன் உங்கள் நடுக்கண்ணை திறக்கபெற்று கொள்வது நலம்! என வள்ளல் பெருமான் அறிவுறுத்துகிறார் அல்லவா? விரைந்து ஞான சற்குருவை பணிந்து ஞானபதேசம் பெருக! குருவில்லாமல் யாரும் இறைவனை அடைய முடியாது!


குரு உபதேசம் தீட்சை பெற்றாலே தெளிவு பெறலாம்!? குரு உபதேசம்
தீட்சை பெறாதவர்களே தெளிவில்லாதவர்கள்! அறிவில்லாதவர்!
சீடனாகாதவன் தெளிவில்லாதாவன் முட்டாள்! முட்டாள் எப்படி
சிவனை இறைவனை அறிவான்! குரு உபதேசம் பெற்று சிந்தை
தெளிந்து திருவடியறிந்து தவம் செய்து சீவனே சிவன் அவனே நம்
உள் ஒளியென உணர்ந்தாலல்லவா பிறவிப்பிணி தீரும்! இந்த
தெளிவில்லா தவன் இனியும் பிறப்பான்! சிந்தை தெளிய சீடனாகு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts