செவ்வாய், 8 நவம்பர், 2011

நித்திய கர்ம விதி

சூரியோதைதுக்கு முன் எழவேண்டும்
விபூதி தரிசித்து சிறிது நேரம் உட்கார்ந்து கடவுளை தியானம்
செய்யவேண்டும் வெற்றிலை + களிப்பாக்கு(அதிகமாக)+ சுண்ணாம்பு
குறைவாக போட்டு முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின் வரும்
ஜலத்தை உட்கொள்ளுதல் வேண்டும் பின்பு எழுந்து சற்று
உலாவுதல் வேண்டும்.

மல ஜல உபாதிகளை கழித்தல் வேண்டும்.

மலம் கழிக்கும் பொது வலது கையால் இடது பக்க அடி வயிற்றை
பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும் போது இடது கையால்
வலது
பக்க அடி வயிற்றை பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது
ஜலமாவது பற்றறக் கழியும் வரையில் வேறு விசயங்களை சிறிதும் நினையாமல் மல ஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும் மலம்
பின்னுந் தடை படாமல் இடது பக்கமாக படுத்து பிராண வாயுவை
வலத்தே வரும் படி செய்து கொண்டு மலசங்கற்ப
த்தோடு மலவுபாதி
கழித்தல் வேண்டும் ஜலம் தடை பட்டால் வலது பக்கமாக சற்றே
படுத்து பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு
ஜல
சங்கற்பத்தோடு ஜலவுபதி கழித்தல் வேண்டும்


இது இல்லாதார்க்கு மட்டுமே விதித்தது, துறவர்த்தர்க்கு தாம்பூலம் தரித்தல் விலக்கு.

வெற்றிலை நுனியும் காம்பையும் கிள்ளி எரிய வேண்டும், முதுகு நரம்பை
நகத்தால் எடுத்து விடவேண்டும் பல் துலக்கும் முன் தாம்பூலம் தரிக்கலாகாது
காலையில் பாக்கு மிகுதியாகவும் , ஊச்சியில் சுண்ணாம்பு மிகுதியாகவும்
மலையில் வெற்றிலை மிகுதியாகவும் கொள்ளவேண்டும்
வெற்றிலை போட்ட
பின்னரே பக்கை போடவேண்டும்.

மல ஜல வுபாதி கழிந்தபின் செவிகள்(காது) கண்கள் நாசி(மூக்கு) வாய் தொப்புள்
இவைகளில் அழுக்கு,பீளை, சளி, ஊத்தை என்கின்ற அசுத்தங்களையும் கைகால்
முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரினால் பற்றற துடைத்தல்
வேண்டும்.

பின் வேலங்குச்சி ஆலம் விழுது இவைகளை கொண்டு பல் அழுக்கு எடுக்க
வேண்டும்.

அதன் பின் கரிசலங்கண்ணி தூள் கொண்டு சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாய் அலம்பவும், பின் பொற்றலை கையாந்தகரை இல்லை அல்லது
கரிசலங்கண்ணி இலை ஒரு பங்கு தூதுளை இலை முசுமுசுக்கு இலை கால் பங்கு சீரகம் கால்பங்கு இவை ஒன்றாய் சேர்த்து சூரணம் செய்து அதில் ஒரு வராகன் எடை ஒரு சேர் நல்ல ஜலத்தில் போட்டு அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் பசும்பால் விட்டு கலந்து அதிலுள்ள ஒரு சேர் ஜலமும் சுண்ட காய்ச்சி அந்த பாலில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடல் வேண்டும்


பொற்றலை கையாந்தகரை தூதுளை இலை ஞான பச்சிலைகள், இதை அடிகள்
அடிகடி வற்புறுத்தி அருளுவர்.


காலையில் இளம் வெயில் தேகத்திற்கு படாதபடி, பொழுது
விடிந்து (௫)5 நாழிகை பரியந்தம் உடம்பை போர்வையோடு காத்தல்
வேண்டும்.இளம் வெண்ணீரில் குளிக்க வேண்டும். விபூதி தரித்துச்
சிவசிந்தனையுடன் இருத்தல் வேண்டும்.

பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும்,
ஆகாரம் கொடுக்கும் போது, மிகவும் ஆலசியமும் ஆகாது மிகுந்த தீவிரமும்
ஆகாது (ஆலசியம்: சோம்பல்:மடிமை.தாமதம்.சோம்புத் தன்மை)

முதற்பக்ஷம்(பதினைந்து நாள் கொண்ட காலம்) சீரகசம்பா அரிசி
அன்றி புன்செய் விளையும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசி வகைகள் ஆகும்.

அது சாதம் ஆகும்போது அதிகம் நெகிழ்ச்சியும் ஆகாது அதிக கடினமும் ஆகாது
நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படமலும் குறைவு படாமலும்
அறிந்து உண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒருபடி குறைந்த பக்ஷமே நன்மை.


போஜனம் செய்தபின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும்.
அந்த நல்ல நீரும் வெந்நீர் ஆதல் வேண்டும்.
அதுவும் அதிகமா குடியதிருத்தல் வேண்டும்.

















5 கருத்துகள்:

  1. ச‌ண்டாள‌ஞ் செய்யாதே த‌வ‌றிடாதே
    நித்திய‌ க‌ர்மம் விடாதே! - அகத்தியர் ஞானம்‍

    பதிலளிநீக்கு
  2. மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு ,
    தங்களின் பதிவை பார்வையிட்டேன் .தாங்கள் ,வள்ளர் பெருமானின் நித்திய ஒழுக்கத்தை நன்கு
    விளக்கமாக எழுதி உள்ளீர்கள் .மிக்க நன்றி .
    அன்புடன்
    தமிழ் விரும்பி

    பதிலளிநீக்கு

Popular Posts