திங்கள், 17 ஆகஸ்ட், 2026

13. திருப்பூவல்லி (thiruvasagam) - 3

“எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி உருமூன்று மா கி உணர்வரிதாம் ஒருவனுமே புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ”

சூரியன், சந்திரன், அக்னி என மூன்று தீயை இறைவன் உலகுக்கு அருளி சக்தியூட்டினான்! அவற்றை நம் சிரசிலும் - வலதுகண் இடதுகண் உள்ளே உள்ள அக்னிகண் ஆக மூன்றாகவைத்து படைத்தான்! அண்டத்திலுள்ளது பிண்டத்தில்! 

நம் மூன்றாம் கண் கடைக்கண் திறக்க முகத்திரண்டு கண்ணே - கண் வழியேதான் போகணும்! இரு புருவம் நெரித்து பார்வை அகமுகமாக பார்க்கும்போது போகும் ஒளி அக்னியை சேரும்! அக்னி பத்திக்கும் - பெருநெருப்பாகும்! இதுவே ஞானசாதனை! 

இறைவன் உருமூன்றாகி நின்றது மூன்று கண்ணாகி நின்றதே! சில அதி புத்திசாலி உரையில் உருவம் அருவம் அருஉருவம் என மூன்றாகி என எழுதியுள்ளார். மூட்டாளே, உரு மூன்று என்றல்லவா மாணிக்கவாசகர் கூறுகிறார்! அருவம் உருஅருவம் எல்லாம் உருவமா? அறிவில்லாதவர்களே?! குருவின் பாதங்களில் பணிந்து ஞானம் கற்று, ஆணவம் அற்று திருவடியை பற்று!! 

நீ பற்றிய உலகப்பற்று அற்றால்தான்! பற்றற்ற இறைவனை நீ பற்ற முடியும்!! பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்! இது சாதாரணமாக படித்து அறியக்கூடியதல்ல குருவின் பதமலரில் பணிந்து அறியக்கூடியது! உணரக்கூடியது! 

அந்த இறைவன் யார் தெரியுமா முப்புரம் எரித்தவன்! எப்படி? புன்னகையால்! வேறு யாருமல்ல! எதுவுமல்ல! நம் கண்மணியின் உள் உள்ள சிவமே அ!! கண்ணே சிவம் - கண்மணி சிரித்தால் - கண்மணி அடைபட்ட துவாரம் திறந்தால் உள் உள்ள சிவமான நெருப்பு முப்புரமாகிய நம் மும்மலங்களை எரித்துவிடும்! இந்த உண்மை அறியாதவர்களை திருமூலர் மூடர்கள் என திட்டுகிறார்! அப்படியானால் நான் திட்டுவதில் தவறென்ன இருக்கிறது!? படித்தவன் திமிர் பிடித்தவன் அடுத்தவனை மதிக்க மாட்டான்! எப்படி குருவை வணங்குவான் பணிவான்! 

ஒரு கூட்டத்தில் கல்லூரி பேராசிரியர் இப்போது ஒரு மாணவனும் ஆசிரியரை மதிப்பதில்லை என்று அலுத்துக் கொண்டார்! மாணவன் மதிக்கும்படியா இவர்கள் நடந்து கொள்கிறார்கள்? பல கல்லூரிகளில் மாணவன் யார் ஆசிரியர் யார் என்றே அறிய முடியாதபடி மாணவனைப்போல நவநாகரீக உடை உடுத்தி தன் உடல்நாற்றம் போக்க நறுமணபொருட்களை பூசி பகட்டாக திரிந்தால் எப்படி மதிக்கத் தோன்றும் டேய் நண்பேண்டா என தோளில்தான் கைபோடுவார்கள்! கல்லூரி பேராசிரியர் பலர் புகைபிடித்தல் தண்ணியடித்தல் புலால் உண்ணல் இன்னும் பல போதை பொருட்களுக்கு அடிமையாகி காமாந்தகனாகவே திரிகிறார்கள்!? 

எப்படிடா உங்களை மாணவர்கள் மதிப்பார்கள்! மிதிக்காமல் விட்டிருக்கிறார்களே என சந்தோஷப்படு! அந்த காலத்தில் உபாத்தியாயர்கள் என்றால் ஒரு பயம் மரியாதை இருந்தது! மாணவர்கள் மட்டுமல்ல சமுதாயமே மதித்தது. அவர்களும் அங்ஙனம் ஒழுக்கசீலர்களாக மேதைகளாக திகழ்ந்தார்கள்! இன்றோ உபாத்தியாயர்கள் போய் வாத்தியார் ஆகி வாத்தி என்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல் ஆகிவிட்டது! மரியாதையே கிடையாது! ஓய்வாத்தி! என்று கூப்பிடுகிறான் மாணவன்! கிண்டல் பண்ணுகிறான்! அன்றைய ஆசிரியர் கௌரவமாக உடையணிந்தனர். சமுதாயத்தில் கௌரவமாக வாழ்ந்தனர் எல்லோரும் போற்றினர்! இன்று பள்ளிக்கூடத்தில கூட பாடம் நடத்துவதில்லை! 3000 ரூ 5000ரூ வாங்கி டியூசன் நடத்தி லட்சலட்சமாக பணம் சம்பாதிக்கும் +2 ஆசிரியர்களே அதிகம்! யாரிடம் சொல்ல இந்த அக்கிரமத்தை! பலர் நன்றாக தின்று கொழுத்து காட்டுப் பண்ணி போலவே உள்ளனர்! மாணவன் எப்படி மதிப்பான்! இன்றைய ஆசிரியர் பலரும் ஆ! - சிறியரே!? ஆண்டவா மாணவர்களை காப்பாற்று!

“வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்கத் தன்சீரடியார் கூட்டமும் வைத்து”

நாம் வணங்க இறைவன் தன் திருவடியை நம் தலைமேல் - கண்ணாக வைத்து அருளியிருக்கிறான்! அந்த திருவடி வார்கழல்வாய் - வார் - திரையால் மறைக்கப்பட்ட, கழல் - திருவடி, வாய் - கண்மணி மத்தியிலுள்ள துவாரம். வாழ்த்த வைத்து நாம் வாயார வாழ்த்தி கண்ணாரக் கண்டு ஞானதவம் செய்ய வேண்டும். நாம் இணங்கி இருக்க, சத்சங்கம் கூடி சத்விசாரம் செய்ய, சீர்பெற்ற அடியார் - கண்ணை குருவருளால் திறக்கப் பெற்ற, இறைவன் அருளால் சீரான கண்ணை பெற்ற நல்ல அடியார் கூட்டமும் தந்தருள்வான்!

“கன்னா னுரித்தென்னை ஆண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான”

கல்லிலே நார் உரித்ததுபோல, எனது வார்கழல் - கழலிலே - திருவடியிலே உள்ள வார் - நார்! திரையகற்றி என்னை ஆண்டு கொண்டான்! இறைவன் அடியேன் மீது கருணை கொண்டு என் கண்மணி மறைப்பை மும்மலத்திரையை, கட்டி வைத்த நாரை - வார் - கயிரை உரித்து இல்லாமலாக்கி திருவடிகளை பொன்போல் ஒளிரச் செய்தான்!


“அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி”

இறைவன் முன்பு, நெடுங்காலத்திற்கு முன்பு ஆலமரத்தின் கீழ் அமர்ந்து அருமறைகள் இவ்வுலகுக்கு அருளினான்! இறைவனால் அருளப்பட்டதே வேதங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts