திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
திங்கள், 6 அக்டோபர், 2025
🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥
🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥
"வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகாது என்செய்கேன் - செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து"
இறைவன் திருவடித் தாமரையாகிய நம்கண்களில் மணியில் உணர்வோடு தவம் செய்து உள்ளொளி பெருகினால் கொடிய வினையிரண்டும் அந்த தீயால் வெந்து அகன்றுவிடும் !
அப்படியானால் வினையிரண்டும் கண்மணி அருகில்தானே முன்னே உள்ளது ?!
இதுதான் ஞான இரகசியம் !
அந்த தீயில் என் மெய்யுருகி - உடலும் உருகிவிடும் !
ஆனால் பொய்யான உடல் தீயில் போட்டால் எரிந்து சாம்பலாகி விடும் !
இங்கே மெய்யுருகி பெருகும் தீயால் - சுத்த உஷ்ணத்தால் ஊனுருகி எலும்பும் உருகி கரைந்து நம் ஒவ்வொரு நாடி நரம்பும் ஒளிமயமாகி ஒளிருமேயல்லாமல் ஒளியால் எரிந்து சாம்பலாகாது !
இதுவே ஞான இரகசியம் !
சாதாரண தீ அனைத்தையும் பஸ்பமாக்கிவிடும்,
இறைவனாகிய பேரொளி நம்மை ஒளிமயமக்கிவிடும் ! இறைவனாகவே மாற்றிவிடும் !
நாம் செய்யவேண்டியது என்னவெனில் இறைவன் ஒளியாகி திகழும் பெரிய துறையாகிய இரு கண்மணியில் நம் மனதை வைத்து உணர்ந்து நெகிழ்ந்து சும்மா இருக்க வேண்டும் இதுவே ஞானதவம் ! செய்தால் இறைவன் காட்சி கிட்டும் உள்ளே போகலாம் அமுதம் சாப்பிடலாம் ! பேரின்பம் பெறலாம். முக்தியடையலாம் ! அந்த ஒப்பற்ற தேனமுது தரும் இறைவனை மனதால் தழுவாமல் சேராமல் இருந்து விட்டேனே என்கிறார் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
லேபிள்கள்:
இரகசியம்,
திருவாசகம்,
திருவெண்பா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.