இறைவன்🔥 மெய்ப்பொருளாக நம் உடலிலே இருப்பதையும் அதை அடைய👁️🔥👁️ கண் ஒளி மூலம் தவம் செய்ய வேண்டும் என்பதையும் எல்லோருக்கும் உரைப்பதே ஞானதானம்!
ஒளவையார் கூறிய, "தானமும் தவமும் தான் செய்தல் அரிதே" என்பது இந்த ஞானத்தை கூறுவதும், மெய்ப்பொருள்👁️🔥👁️உணர்ந்து தவம் செய்வதுமேயாகும்!
இதை தான் வள்ளலார், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்றார்.
இதையேதான் மகாகவி பாரதியாரும், " அன்னசத்திரம் ஆயிரம் கட்டலைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று" என்று அழகாக கூறியிருக்கிறார் !
ஒரு அன்னசத்திரம் கட்டி ஆயிரம்பேர்களுக்கு அன்னதானம் கொடுக்கலாம் ! ஆயிரம் அன்னசத்திரம் கட்டினால் பத்துலட்சம் பேர்க்கு அன்னதானம் கொடுக்கலாமல்லவா ?
இது ஒன்றும் பெரிய விஷயமல்ல !? இதைவிட மேலானது என்ன தெரியுமா ?
பல லட்சம் பேர்களுக்கு அன்னதானம் கொடுப்பதை விட ஒருவனுக்கு “எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !
👁️🔥👁️
எது எழுத்து ? 👁️அ, உ👁️ ஆகிய எட்டும் இரண்டுமே எழுத்து - ஞான எழுத்தாம் ! இந்த ஞான எழுத்தை அறிவிப்பதே, ஞானதானம் செய்வதே அரிதினும் அரிதாம் !
மனிதனாக பிறப்பது,நல்லபடியாக பிறப்பது,
ஞானக்கல்வி அறிவது உணர்வது ஞானதானம் செய்வது
இதை தான் அரிதினும் அரிதாக சொல்கின்றனர் எல்லா ஞானிகளும்! ஞானதானமே, அரிதினும் அரிதான, அதி உன்னதமான தானத்தில் சிறந்த அன்னதானத்தை விடவும் சிறந்தது ஆகும்.
பக்கம் - 71,72
உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்
www.vallalyaar.com
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வெள்ளி, 17 அக்டோபர், 2025
வியாழன், 16 அக்டோபர், 2025
ஞானதானம் செய்
ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன்,
வைராக்கியத்துடன்,தவம் செய்ய வேண்டும் ! பக்தி,யாரிடமாவது காட்டு!
அப்போது தான்,நீ பண்படுவாய்! பக்தியில்லையேல்,ஞானம் இல்லை !
குருவிடம் பக்தி 🔥செலுத்து ! உருப்படுவாய்! எப்படியோ,
🔥பக்தி வேண்டும்! அதுதான்,உனக்கு பணிவை கொடுக்கும்! ஒழுக்கத்தை கொடுக்கும்!
நல்ல நெறியோடு வாழ்வாய்! இறைவனின் பெரும் புகழை,
மனமுருகி பாடு! ஆடு!
👁️🔥👁️ இறைவனைப் பற்றி, உலகுக்கு எடுத்துக்கூறு !
✨ஞான தானம் செய்!✨
இறைவன்- ஒவ்வொரு மனித உடலிலும், உயிராகவே ஆத்ம ஜோதியாகவே தங்கஜோதியாகவே அருட்பெருஞ்ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு,
இதுவே ஞானதானம் ! இதை விளக்கும், மெய்ஞ்ஞான நூற்களை தானம் செய்!
- பக்கம் 66,67.
வைராக்கியத்துடன்,தவம் செய்ய வேண்டும் ! பக்தி,யாரிடமாவது காட்டு!
அப்போது தான்,நீ பண்படுவாய்! பக்தியில்லையேல்,ஞானம் இல்லை !
குருவிடம் பக்தி 🔥செலுத்து ! உருப்படுவாய்! எப்படியோ,
🔥பக்தி வேண்டும்! அதுதான்,உனக்கு பணிவை கொடுக்கும்! ஒழுக்கத்தை கொடுக்கும்!
நல்ல நெறியோடு வாழ்வாய்! இறைவனின் பெரும் புகழை,
மனமுருகி பாடு! ஆடு!
👁️🔥👁️ இறைவனைப் பற்றி, உலகுக்கு எடுத்துக்கூறு !
✨ஞான தானம் செய்!✨
இறைவன்- ஒவ்வொரு மனித உடலிலும், உயிராகவே ஆத்ம ஜோதியாகவே தங்கஜோதியாகவே அருட்பெருஞ்ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு,
இதுவே ஞானதானம் ! இதை விளக்கும், மெய்ஞ்ஞான நூற்களை தானம் செய்!
- பக்கம் 66,67.
உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்
லேபிள்கள்:
உலககுரு,
ஞானசற்குரு,
பக்தி
திங்கள், 13 அக்டோபர், 2025
விழியை தூண்டி உணர்த்துபவர் - குரு
🔥திருமந்திரம் 2854 - ஞானவிளக்கம்🔥
" நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது "
நோக்குங்கள் எதை - நோக்கப்படும் பொருளை !
எதால் பார்க்கிறோமோ அதை பாருங்கள் !
அது மிக மிக நுண்ணிய பொருள் !
எதால் பார்க்கிறோம் ?
கண்ணால்தானே பார்க்கிறோம் !
கண்ணை பார்க்கணும் அதுதான் ஞானம் !
கண்ணாடியில் பார்க்கலாம் என்பீர் !
புறத்தே பார்ப்பதல்ல ?!
கண்ணை நாடி பார்த்தால் நம் கண்ணே ஒரு கண்ணாடிதான் !
பளப்பளப்பான பளிங்கு கண்ணாடிதானே நம் கண்கள்
நம் கண்களால் பிரபஞ்சத்தையே பார்ப்பதுபோல நம் கண்களை
என்று காண்கிறோமோ அன்றுதான் ஞானம் பிறக்கும் ! அவனே ஆத்ம சாதகன் !
அதற்குரிய உபாயம் சொல்லித் தந்து வழிகாட்டுபவர்
அதற்குரிய உபாயம் சொல்லித் தந்து வழிகாட்டுபவர்
விழியை தூண்டி உணர்த்துபவர்தான் குரு !
பாருங்கள் விழித்திருந்து !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
பாருங்கள் விழித்திருந்து !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
லேபிள்கள்:
கண்,
குரு,
திருமந்திரம்
வெள்ளி, 10 அக்டோபர், 2025
🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥
🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥
"அழுமடி யாரிடை யார்த்துவைத்
தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேயின்னுங் காட்டு"
ஞான விளக்கம் :
மாணிக்கவாசகர் ஒவ்வொரு பாடலிலும் தெளிவாக கூறுகிறார் !
அடியார் என்பவர் அழுபவரே!
"அழுதால் பெறலாம் உன்னை” என்று அதனால்தான் பாடி அருளினார் !
அப்படிப்பட்ட மெய்ம்மையார், அழும் அடியார்களோடு என்னை சேர்த்து வைத்து ஆட்கொண்டு அருளினாய் !
அழும் அடியார்களே ஞானதவம் செய்து இறைவனை அடைவர் !
அழுது அழுது கண்ணீரால் என் மணியை கழுவி நன்றாக கழுவி என் அழுக்கையெல்லாம் - மும்மல அழுக்கையெல்லாம் நான் போக்க வேண்டும் இறைவா அருள்புரி !
பக்தியில் கோவிலில் சிவனுக்கு நன்னீரால் கங்கையால் அபிஷேகம் !
ஞானத்தில் உடலில் கண்ணாக சிவனுக்கு கண்ணீரால் அபிஷேகம் ! கண்ணீரால் சிவனை கழுவி கழுவி நம் பாவ வினைகளை நீக்கி நாம் பரிசுத்தமாவோம் !
நம் பாவம் கரைய கரைய உள்ளிருக்கும் பரமன் அருள் கொஞ்சங் கொஞ்சமாக பெருகும் !
அழு ! நன்றாக அழு ! மணியை கழுவு !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
லேபிள்கள்:
அழு,
ஞானதவம்,
திருவாசகம்.கங்கை
திங்கள், 6 அக்டோபர், 2025
🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥
🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥
"வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகாது என்செய்கேன் - செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து"
இறைவன் திருவடித் தாமரையாகிய நம்கண்களில் மணியில் உணர்வோடு தவம் செய்து உள்ளொளி பெருகினால் கொடிய வினையிரண்டும் அந்த தீயால் வெந்து அகன்றுவிடும் !
அப்படியானால் வினையிரண்டும் கண்மணி அருகில்தானே முன்னே உள்ளது ?!
இதுதான் ஞான இரகசியம் !
அந்த தீயில் என் மெய்யுருகி - உடலும் உருகிவிடும் !
ஆனால் பொய்யான உடல் தீயில் போட்டால் எரிந்து சாம்பலாகி விடும் !
இங்கே மெய்யுருகி பெருகும் தீயால் - சுத்த உஷ்ணத்தால் ஊனுருகி எலும்பும் உருகி கரைந்து நம் ஒவ்வொரு நாடி நரம்பும் ஒளிமயமாகி ஒளிருமேயல்லாமல் ஒளியால் எரிந்து சாம்பலாகாது !
இதுவே ஞான இரகசியம் !
சாதாரண தீ அனைத்தையும் பஸ்பமாக்கிவிடும்,
இறைவனாகிய பேரொளி நம்மை ஒளிமயமக்கிவிடும் ! இறைவனாகவே மாற்றிவிடும் !
நாம் செய்யவேண்டியது என்னவெனில் இறைவன் ஒளியாகி திகழும் பெரிய துறையாகிய இரு கண்மணியில் நம் மனதை வைத்து உணர்ந்து நெகிழ்ந்து சும்மா இருக்க வேண்டும் இதுவே ஞானதவம் ! செய்தால் இறைவன் காட்சி கிட்டும் உள்ளே போகலாம் அமுதம் சாப்பிடலாம் ! பேரின்பம் பெறலாம். முக்தியடையலாம் ! அந்த ஒப்பற்ற தேனமுது தரும் இறைவனை மனதால் தழுவாமல் சேராமல் இருந்து விட்டேனே என்கிறார் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
லேபிள்கள்:
இரகசியம்,
திருவாசகம்,
திருவெண்பா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.