திங்கள், 8 ஜூலை, 2013

இறைவனை அடைய உதவும் படிநிலைகள்




இறைவனை உணர்ந்த, அடைந்த ஞானிகள் இறைவனை உணரும் படிகற்களாக 4 முக்கிய நிலைகளை கூறிப்பிடுகின்றனர் .அவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகை படும்

இவைகள் குறிப்பதையும் அதன் அர்த்தத்தினையும் இந்த பதிவில் பார்ப்போம். இவைகள் எங்கள் ஞான குரு திரு  சிவா செல்வராஜ் அவர்களின் அருளால் , வள்ளல் பெருமானின் ஆசியால் வெளியிடுகிறோம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றிய தெளிவுகளை மக்களுக்கு உணர்த்துவதே இப்பதிவின் நோக்கம். பதிவினை முழுமையாக படிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

சரியை   -  கோயிலுக்கு சென்று விக்ரகத்தை வணங்குதல்

கிரியை  -  கோயிலில் பார்த்த விக்ரகத்தை , பூஜை முறைகளை நம் வீட்டில் செய்தல்.

யோகம் -   பிரணாயாமம் , வாசி போன்ற பயிற்சிகளில் இடுபடுதல். யோகம் என்பதற்குரிய சரியான அர்த்தம் ஒன்றுதல்.

ஞானம்நான் யார் என்று தன்னை அறியும் முயற்சிபரிபூரண அறிவே ஞானம்.

இந்த நான்கு நிலைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து 16 நிலைகளாகிறது. இந்த 16 நிலைகளும் என்ன வென்று பார்போம்.

இந்த எல்லா படிகளிலும் முதல் நிலை என்பது சரியை வருகிறது. இந்த அர்த்தம் யாதெனின் அந்த அந்த நிலைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கொண்டு அந்த நிலைகளை அறிவது. அதாவது ஒரு குருவினை கொண்டு தெரிந்து கொள்வதுகுருவை நாடி சென்று அந்த படிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் இரண்டாவதாக எல்லா நிலைகளில் வரும் கிரியை என்பது நாம் செய்ய வேண்டியதை குறிக்கும். குரு மூலம் சரியையில் தெரிந்து கொண்டதை செய்வது. சீடன் செய்ய வேண்டிய கிரியைகள் குறிக்கும்.
இதே போல் மூன்றாவதாக எல்லா நிலைகளில் வரும் யோகம் குறிப்பது குருவின் மூலம் தான் கற்றதில் முழுதாக ஒன்றுவதுஇவ்வாறு ஒருவன் அந்த படிநிலைகளில் குரு உபதேசத்தின் படி ஒன்றும் போது அந்த படி நிலைகளின் ஞானம் கிட்டுகிறது.

மேல் கூறியவற்றை கொண்டு  கீழ் வரும் படி நிலைகளை பற்றி ஆழமாக பார்ப்போம்.

1. சரியையில் சரியைகோவிலுக்கு சென்று வழிபாடும் முறைகளை பூசாரியின்  (சரியையில் குருமூலம் அறிவது. உதரணத்திற்கு எந்த சந்தியில் முதலில் வழி பட வேண்டும், எத்தனை  முறைகள் வலம் வர வேண்டும் போன்ற விதி முறைகளை அறிந்து கொள்வது. இதை தெரிவித்து பூஜை செய்யும் பூசாரியே சரியை நிலையில் குரு ஆவார்.

2. சரியையில் கிரியை : சரியையில் சரியை நிலையில் அறிந்து கொண்டதற்கு ஏற்ப கோவிலில் சென்று முறையாக வழிபாடு செய்தல். நம் செய்யும் செயலே கிரியை இங்கு.

3. சரியையில் யோகம் : கோயில் வழிபாட்டில் பரிபூரணமாக ஒன்றுவது

4. சரியையில் ஞானம் : பரிபூரணமாக ஒன்றி கோயில்  வழிபாடு செய்வதன் பலனாக நமக்கு கிட்டும் அறிவு. கோவில் வழிபாட்டின் நோக்கம் தெரிகிறது. இது முடிந்த பின் கிரியைக்கு செல்லும் புண்ணிய பலன் (தகுதி ) பெறுகிறான் சாதகன். இதில் ஒன்றி ஒருவன் பெரும் முக்தி - சரியையின் ஞானத்தின் பலன் -       "சாலோக முக்தி".

---- அடுத்து கிரியையின் நிலைகளை பார்போம் ----
1. கிரியையில் சரியை : நம் வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகளை , விக்ரகங்களை தகுந்த  ஆசான் மூலம் அறிவது. இதை தெரிவிப்பவரே  கிரியையில் குரு.

2. கிரியையில் கிரியை : விட்டில் ஸ்தாபித்த விக்ரகங்களை குருவின் மூலம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டதற்கு ஏற்ப நாம் செய்யும் பூஜை.

3. கிரியையில் யோகம் : நாம் செய்யும் பூஜையில்  பரிபூரணமாக ஒன்றுவது.

4. கிரியையில் ஞானம் : நாம் செய்த பூஜையில் நாம் பெரும் பலன். கிரியையில் நாம் பெரும் அறிவு. நாம் செய்த பூஜையின் நோக்கம் அறிந்து கொள்வது. கிரியின் ஞானத்தின் முடிவு சாமீப முக்தி.

----அடுத்து யோகா நிலைகளை பார்போம்-----

1. யோகத்தின் சரியை : தகுந்த யோகா ஆசிரியரின் மூலம் யோகா பயிற்சிகளை அறிவது.

2. யோகத்தில் கிரியை : பயிற்சிகளை முறைப்படி ஒழுக்கதொடு செய்வது.

3. யோகத்தில் யோகம் : யோகத்தின் கிரியையின் முடிவு. நாம் செய்யும் பயிற்சிகளில் முழுதாக ஒன்றுவது.

4. யோகத்தில் ஞானம் : யோகத்தில் ஒன்ற நாம் பெறுவது சமாதி நிலை. யோகத்தில் முக்தி பெறுவது சாமீபம் என்பர்.

இவ்வாறு மூன்று முக்கிய படி நிலைகளும் ஞானத்திர்கே ஒருவனை கொண்டு வரும். ஞானமே இறைவனை அடைய, இறை நிலை எய்த வழி காட்டும்ஞானமே முடிந்த முடிபான "சாயுச்சிய முக்தி" யை ஒருவனுக்கு தரவல்லது. வள்ளலார், ஆண்டாள், பத்ரகிரியார் போன்றோர் பெற்ற ஒளி நிலை. ஊன உடலே ஒளி உடலாக மாறும் தன்மைஒவ்வொரு சாதகனும் சரியை,கிரியை,யோகம் முடித்து ஞான நிலைக்கு வர வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் காலம் போதாது என்று ஞான நிலைக்கு நேரடியாக வள்ளலார் நம்மை அலைக்கிறார்ஞான நிலை ஞான சாதனை என்றார் என்ன? இறைவன் நம் உடலில் எத்தன்மையில் உள்ளாரோ அதன்மையிலே ஒன்றுவதுஇறைவன் எத்தன்மையில் உள்ளான்?

இறைவன் பேரோளியாக உள்ளான் என்று எல்லா மதங்களும் , ஞானிகளும் ஒப்பு கொள்கின்றனர்நாம் இறைவனின் பிள்ளைகள் எனின் நாமும் (நம் உயிரும்) ஒளி அம்சம் அல்லவா. நம் உயிர் அந்த பேரொளியின் சிறு அம்சம் அல்லவா? இந்த சிறு ஒளியை அறிந்தால் அந்த பேரொளியை அறிந்து கொள்ளலாம் அல்லவா? இந்த சிறு ஒளி (ஜீவா ஒளி) அறிய முற்படுவதே அதாவது நாம் யார் என்ற கேள்விக்கு பதில் அறிய முற்படுவதே ஞானம். இந்த ஞானத்திலும் நான்கு நிலைகள்.

1.      ஞானத்தில் சரியை : ஒரு ஞான சற்குருவை பெற்று அவர் மூலம் திருவடி உபதேசம், திருவடி தீட்சை பெறுவது. நம் உயிர் நம் தலை நடுவில் இரு கண்களும் உள் சேரும் இடத்தில உள்ளது என்பதை அறிந்து அது துலங்கும் (வெளிப்படும்) இடமா கண்ணே என்பதை உபதேசத்தின் மூலம் அறிந்து கண்ணில் உணர்வு பெறுவதே ஞானத்தில் சரியை. ஞானத்தில் செய்யும் சாதனையை வள்ளல் பெருமான் "நினைந்து, நினைந்து " என்ற ஞான சரியை பாடலில் குறிப்பிடுகிறார்.

2.      ஞானத்தில் கிரியை : சற்குருவினால் பெற்ற  உயிர் உணர்வை பெருக்குவது. இந்த உணர்வில் நாம் ஒன்ற நாம் செய்யும் பயிற்சி. சும்மா இருபதற்கு நாம் செய்யும் பயிற்சி இதுஇப்பயிற்சி தொடர தொடர நம் வினைகள் நம் உயிர் ஒளியால் சுட்டு எறிக்கபடும். வள்ளலார் நம்முடன் இருந்து தலைக்கு வரும் வினைகள் தலை பாகையோடு விலக செய்வார்.

3.      ஞானத்தில் யோகம் : நம் உயர் உணர்வை பெருக்க பெருக்க நம் உயிர் ஒளி பெருகி நம் மனம் உயிர் உணர்வில் முழுமையாக ஒன்றும். இவ்வாறு ஒன்றுவதே ஞானத்தில் யோகம்.


4.      ஞானத்தில் ஞானம் : நம் ஆன்ம சாதனை முந்தைய நிலைகளில் தொடர நம் வினைகள் நீங்கும். ஆன்ம ஜோதி தரிசனம் கிட்டும். நம் ஆன்மாவே குருவாக அமையும். நம் ஆன்மாவே குருவாக அமைந்து நம்மை இறைவனிடம் அழைத்து செல்லும். அன்னை வாலை அமிர்தம் வழங்கி நம்மை ஆண்டவனிடம் கொண்டு செல்வாள்முடிந்த முடிபாக ஞானம் கிட்டும்.



1 கருத்து:

Popular Posts