புதன், 26 அக்டோபர், 2011

ஒளி-சோதி

:காயத்ரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்வ:
தத் ஸ விதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி:
தியோயோந: பிரசோதயாத்

யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ,
அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானம் செய்வோமாக'' என்பது இதன் பொருள்.


உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - Bharathi

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி வாலைப்பெண்ணே - Konganavar siddar

மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே - மாணிக்கவாசகர் சிவபுராணம்
ஓராதார் உள்ளத்து, ஒளிக்கும் ஒளியானே

தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன்
சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன் - பாம்பாட்டி சித்தர்

மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ்சுடர் நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி - ஔவை

சுத்த நிர்க் குணமான பர தெய்வமே
பரஞ் சோதியே சுகவாரியே - தாயுமான சுவாமி

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. -

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே. -அபிராமி பட்டர்

உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய் - Arunagiri nathar

சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல்
சோதிவந்து உதித்திடும் துரியகீதம் உற்றிடும்
- சிவவாக்கியர்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ! - சிவவாக்கியர்

ஐம் புலன் இருக்குமிடம் தலை. என் சண் உண்டம்பில் சிரசே பிரதானம் .
ஒரு அறைக்குள் செல்ல கதவு(உள் செல்லும்மிடம் ) தேவை.
ஐம்புலன்கள் மனதின் வெளிப்பாடு/உள்ளே(Input/output)

ஐம் புலனில் ஒளி துலங்குவது(glitter ) கண்.
வள்ளலார் குறிப்பிடும் புருவமத்தி நேத்திரம்(eye)


உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-சேக்கிழார்










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts