திங்கள், 5 செப்டம்பர், 2022

🔥 மெய்ப்பொருளை பற்றுவோம் 🔥

 

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு"



உலகிலுள்ளவர்கள் எல்லோரும் சொல்லும் விஷயங்கள் பலவாயினும் அவற்றின் அடிப்படை, ஆரம்பம் இறைவனைப் பற்றியதேயாகும் !




அறிவுப் பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் தான் எல்லோரும் சொல்வது "மெய்ப்பொருள்" பற்றித்தான் எனப்புரியும் !




யார் சொன்ன சொல்லாயினும் அதை பிரித்து பார்த்து ஏன் எதற்கு என சிந்தித்தால் உண்மை - உன்மெய் - மெய்ப்பொருள் தான் எல்லாமே எனப் புரியும் ! விளங்கும் !




எப்பொருளும் மெய்ப்பொருள் தான் எனப் புரிய வேண்டுமானால் நாம் மெய்ப்பொருளை பற்றித்தான் ஆகவேண்டும் !




அது ஞான சற்குரு பற்ற வைத்தால்தான் நடக்கும் !




தீ பற்ற வேண்டுமல்லவா ?




குருவை பணிந்தால் குரு பற்ற வைப்பார் !




நீங்கள் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள்.


மெய்ப்பொருள் ஒளி உங்களுக்கு கைவல்யப்படும் !


"மெய்ப்பொருள் இன்னதென்று குருவே சொல்வார்" என சித்தர் பெருமகனார் கூறுவார்.


திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அடியேனை குருவாக்கி கன்னியாகுமரி தங்கஜோதி ஞானசபையில் வைத்து, இந்த ஞான உபதேசங்களை உலகருக்கு உரைத்திடவும், நூல்களாக எழுதி வெளியிட்டு உலகர் உணர்ந்திடவும், ஞான தீட்சை கொடுத்து உலகர் ஞானம் பெறவும், அடியேனை கருவியாக்கி வைத்துள்ளார்கள். அடியேன் எழுதி வெளிவரும் 24-வது நூல் இது ! "சாகாக்கல்வி".


கற்பிக்கிறேன் ! கற்றுக் கொள்ளுங்கள் !


கண்ணின் மணியான கருணைக்கடல் கடவுள் கைவிடமாட்டார். அவன் திருவடியை பற்றினால், நம்மை கைதூக்கி மேலேற்றி மரணமிலா பெருவாழ்வு நல்குவார் !




இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts