வெள்ளி, 30 செப்டம்பர், 2022

தேவி பூஜாவிதி

"மங்களமாய் நவராத்திரிப் பூசைக் காக வந்தமர்ந்த திரிசூலி

மகிழோங்காரி"


தேவி பூஜாவிதி

வாலை திரிசூலி ஓங்கார

நாதமானவள் ஆதாலல் ஓங்காரி!

ரீங்காரம் செய்பவள் ஆதலால் ரீங்காரி! திரிசூலம் கையில் ஏந்தியவள் ஆதலால் திரிசூலி! சூரிய சந்திர அக்னி என மூன்று கலையாக துலங்குவதால், திரிசூலம் போல் துலங்குவதால் திரிசூலி நவராத்திரி பூஜைக்காக கன்னிய குமரியிலே வந்தமர்ந்தளாம்!

மூன்று மூன்று மூன்று வட்டமாக மூம்மூன்று நாளாக 9 நாள் பூஜையாம் அதுதான் நவராத்திரி பூஜையாம்!

ராத்திரி தானே நமக்கு இப்போது! பாவவினையால் சூழ பிறந்திருப்பதால் ராத்திரிதான்! 9 ராத்திரி - நவராத்திரி 9 வட்டத்தை ஒன்றாக்கி- நவகோணத்தில் அமர்ந்திருக்கும் வாலையைக் கண்டு! 10-ம் நாள் வெற்றி விழாவாக விஜய தசமியாக கொண்டாட வேண்டும்! இதுவே தசரா! ஞானம்!

வாலையை காண கன்னியகுமரி வருக! நவராத்திரி பூஜை உன்னுள் செய்க! உன்னுள் நீ காணவிருக்கும் சிறுபெண் - வாலை - கன்னிய குமரி - பகவதியம்மனை சிலா ரூபமாக காண வா கன்னியகுமாரிக்கு!


பக்தியால் பார்த்தால் பகவதியம்மன்! தவத்தால் உணர்ந்தால் வாலை! பார்! உணர்!
கன்னி 'ய' குமரியிலே!


பிள்ளை நம்மை கண்டால் தாய்க்கு மகிழ்ச்சி தானே! எத்தனையோ பிறவி கடந்து இப்போதாவது இந்த தாயை காண வருகிறானே! இந்த தாயின் மகிமை உணர்ந்தானே என மகிழ்ந்து நம்மை வரவேற்பாள் அந்த ஓங்காரி! ஓம் ஆக இருப்பவன்! ஓம் எனும் நாதமாக விளங்குபவள்! பிரணவஸ்வரூபிணீ!
 

ஞானம் பெற விழி

பக்கம் எண் 125


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts