புதன், 28 ஜூலை, 2021

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் - இயேசு

கண்மணி மாலை நூலிலிருந்து : 

28 🔥 இதைச் சொல்லவில்லை இயேசு. 🔥 
 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். 
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்பது பைபிள் வாசகம். இதற்கு என்ன விளக்கம் ?     

❌ சாதாரணமான உண்மை அறியாத அப்பாவிகள். நாம் நெஞ்சத்தில் தீமை நினைக்காமல் நல்லதை நினைத்து வாழ்ந்தால் பாக்கியவான்களாகி தேவனாகிய ஆண்டவரை தரிசிக்கலாம் என்பர்.    - இதைச் சொல்லவில்லை இயேசு.             
❌  நமது நெஞ்சு இரத்தத்தை சீராக்கும் ஒரு உறுப்பு அவ்வளவே. 

 ஞானிகள் ஞானத்தைத்தான் முதன்மையாக சொல்கிறார்கள். அதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.     

👀   நமது கண்களில், வலது கண்ணில் சூரியன் உதயம் என்றும், இடது கண்ணில் சந்திரன் உதயம் என்றும், இரு கண்களிலும் இரு உதயம் என்றும் அதுவே இருதயம் என்றும் கூறுகின்றனர்.      

 👀  இந்த இரு கண்களில் இரு உதயத்தில் நினைவை செலுத்தி நினைந்து அழுது அங்குள்ள அழுக்காகிய மும்மலங்களை நீக்கி அதை சுத்தப்படுத்துபவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆண்டவனை தரிசிப்பார்கள் என்றே விளக்கம், 

 🙏 சிந்தித்து உணர்க. 🙏 

 🔥விசுவாசம் கொண்டால்தான் இரட்சிக்கப்படுவீர்கள்.🔥
 
 இறைவன் திருவடிகளே நம் கண்கள்!! 

 - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா 
 www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts