புதன், 24 ஜூலை, 2019

அபிராமி பட்டர் - பெளர்ணமி

அபிராமி பட்டரை பொறுத்தவரை சதா  காலமும் தவத்தில் மூழ்கி திளைப்பவரல்லவா?

எப்போதும் ஒளிக் காட்சி தானே கண்டு கொண்டிருப்பார்?
இருளேது?அமாவாசை ஏது? என்றும் பெளர்ணமி தான் எப்போதும் பெளர்ணமி தான்!

ஒவ்வொரு ஆத்ம சாதகனுக்கும் என்றும் பெளர்ணமி தான்!
என்றும் பௌர்ணமியாகவே இருக்கும்படி எப்போதும் தவத்தில் மூழ்க
வேண்டும்!அனுபவம்!

இப்படி சதா சர்வகாலமும் பெளர்ணமியாகவே இருந்தால் வாலைகாட்சி கிட்டும்!
வாலை அருளால் அமிர்தரஸம் பெருகும்! நமக்கு கிட்டும்.

நம் உடலின் 72000 நாடிகளிலும் அது பாய்ந்து பரவும்! உயிருக்கு மேலும் உயிரூட்டுகிறது. சக்தியளிக்கிறது! இதைப் பருகினவன் பசிதாகம் அற்று காயசித்தியும் பெறுவான்.

ஞானம் பெறுவான் , மரணமிலா பெருவாழ்வும் பெறுவான்!இடகலையாம் -இடது கண்ணாம் -சந்திரனே - உ_சக்தியேயாகுமல்லவா? பெளர்ணமி தரிசனம் காண்!

"இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்" என்று விநாயகர் அகவலிலே ஒளவையார் குறிப்பிடுகிறார்!

இடை சக்கரம் இடை கலையான - இடது கண்ணான சக்கரமான வட்டமான சுழலும் கண்மணிதான் சந்திரன் அது ஈரெட்டு 16 கலைகளையுடையது !

முதலில் தாயின் பாதத்தைப் பிடி! தாயை சரணடை!பூரண சந்திரனாகு! பின்னரே ஞானம்! அம்பிகையை  பிடித்தால் தான், பெளர்ணமியில்தான் பிடிக்க முடியும்!?

அதனால் தான் பக்தியில் கோவிலில் பெளர்ணமி பூஜை! அம்பிகையின் தலையிலே ஒரு கலை சந்திரன் காட்சி தருகிறான்! பூரண சந்திர ஒளியில் தான் அம்பிகையை காணலாம்!!

ஞானசற்குரு
ஞானம் பெற விழி
பக்கம் எண் 93

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts