வியாழன், 25 ஜூலை, 2019

57 . மருட்கை விண்ணப்பம்

இரண்டாம் திருமுறை

57 . மருட்கை விண்ணப்பம்

யாது செய்குவன் போதுபோ கின்ற 
தண்ண லேஉம தன் பருக் கடியேன் 
கோது செய்யினும் பொருத்தருள் புரியும் 
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர் 
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன் 
வலியி லேன்செயும் வகை ஒன்றும் அறியேன் 
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் 
வண்கை யீர் என் கண்மணி அணையீரே 

மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களால் - கருவிலே
உருவாக்கபடுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கண்களிலே
ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் என் கண்மணி அனையீரே
-அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும்
என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும்
அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள் புரியும் இறைவா!
எனை அடுத்த குறும்பர் அறியாமையினால் வாதம் செய்கின்றனர்.

மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது.
வேதனைப்படுகிறேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும்
வலிமை இல்லையே! என்ன செய்வது என அறியாமல் திகைக்கின்றேனே
இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?

காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழக்கை எனும் திமிங்கிலம்
நம்மை விழுங்கி விடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமானால்அருள் பொழியும்
நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்சோதி இறைவனை சரண்புக
வேண்டும் - பாடல் 3

ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய் போன வினை நம்மை
மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே
வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்!
பாடல் 7

இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8

இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம்
இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால்  நம்
கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை
பற்ற வேண்டும் . சரணடைய வேண்டும். அப்போது தான் இறைவன்
பரிபூரண அருள் கிட்டும்! எல்லா துயரங்களிலிருந்து விடுபடலாம்!

சஞ்சி தந்தரும் காமம்   - பாடல் 9

ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ
புண்ணியமாக அவரவர்க்கே திரும்ப வருகிறது. அவை பிராரத்துவம்
-ஆகான்மியம்-சஞ்சிதம் என மூன்று வகைப்படும். சராசரி மனிதனுக்கு
பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது.பிறந்து வாழ்வதில் ஆகான்மியம் நடக்கிறது
அவரவர்   வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவே குறையவோ
செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலே முடிந்து போகிறது. ஆனால் சாமான்யன்
ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று ஞான உபதேசம் - திருவடி தீட்சை
பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுவான்.
பிராரத்துவம் குரு அருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாமல் ஆகிவிடும்.
அதன் பிறகு சஞ்சித கர்மம் தாக்கும். குருவை நாடி ஞான தீட்சை பெற்று
தவம் செய்பவனுக்குதான் சஞ்சித கர்மம்! மற்றவர்க்கு இல்லை!  எதற்கு
வருகிறது? இல்லாமல் ஆக்குவதற்கு தான்! ஒரு கருமமும் இல்லாமல் ஆனால் தானே
பிறப்பு இறப்பு இல்லாமல் போகும்!? பிறந்து இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா?
நமக்கு வேண்டுவது அதுதானே! நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால்
எல்லா துன்பங்களும் நீங்க பெற்று வாழ்வாங்கு வாழலாம்

ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா   

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts