அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில லோக அன்னைக்கு சேவகம் செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும் 2 கோடியாகும்!
அவ்வாறு உள்ள 2 கோடி பூதகணங்கள் தான் உலகெங்கும் தாயின் கட்டளையை நிறைவேற்றும்
சேவகர்கள்!
மிகப்பெரிய இரகசியம் இது!
சித்தர் சொன்ன இரகசியம்!
ஆய்ந்து அறிந்து அறிய முடியாத மனோவாக்கு காயத்துக்கு அப்பார்ப்பட்ட அந்த அரனுக்கு இவளே எல்லாமாம்!
ஆதி சக்தியாகி படைத்ததால் தாய்!
சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய் துலங்குவதால் மனைவி!
உயிரெல்லாம் சக்தியம்சமல்லவா சிவம் படைத்தாரல்லவா எனவே உயிரை படைத்ததால்
உயிராக உள் பாதியாக சக்தி துலங்குவதால்\ மகளுமாவாள்!
ஆஹா அற்புதம்!
எவ்வளவு பெரிய உண்மை ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக
பூதகணங்கள் உள்ளன!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது!
"நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர் முருகப்
பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்!
வீரபாகு முதலானவர்கள்!
முருகனின் கணங்கள் தான் முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவப்படுத்தி ஞானப்பாதைக்கு அழைத்துச் செல்வர்!
ஆஹா அற்புதம்!
எவ்வளவு பெரிய உண்மை ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக
பூதகணங்கள் உள்ளன!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது!
"நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர் முருகப்
பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்!
வீரபாகு முதலானவர்கள்!
முருகனின் கணங்கள் தான் முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவப்படுத்தி ஞானப்பாதைக்கு அழைத்துச் செல்வர்!
தாயே வாலையே என மகாமாயையை பணிந்தால் அரவணைப்பாள்!
மும்மலத்தில் பெரியது மாயை!
எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்!
தாயே என்று சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!
உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக
பார்த்தால் மட்டுமே தப்பலாம்!
அபிராமிபட்டரைப் போல!
அழுதால் அமுதம் தருவாள்!
ஞானசம்பந்தருக்கு தந்ததுபோல!
பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு தந்ததைப் போல!
இன்னும் சொல்லிக் கொண்ட போகலாம் அன்னையின் மகிமையை!
அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்!?
இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது போல!?
எம்மைப் பொறுத்தவரை எல்லாமே தாய்தான்!
வாலைதான்!
கன்னி'ய'குமரி பகவதி அன்னை சரணம்! சரணம்! சரணம்!
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 109
குருவின் திருவடி சரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக