திங்கள், 28 ஜனவரி, 2019

போலி சாமியார்கள் போலி ஆஸ்ரமங்கள்

பொய் சமயங்கள் போலி சாமியார்கள் போலி ஆஸ்ரமங்கள் கூறும் யோகம் தவம் கர்மம் எல்லாம் ஒவ்வாத சாத்திரமாம்.

ஒத்துப் போகாது ஏன்?

அதில் உண்மை இருக்காது!

அப்படி போலியான உண்மையில்லாதவர்களை நாடினால் அவர்களை சவலைப் பிள்ளைகளை போன்று, போஷாக்கில்லாத தாய்ப்பால் அருந்தாமல் முழுவளர்ச்சியடையாத நோஞ்சான் பிள்ளையை போன்றவர்கள்!

உண்மை தெரியாமல் தடுமாறுவர்!

ஆனால், இறைவன் திருவடியை தம் கண்ணை உணர்ந்து தவம் செய்வோர் கவலை தீர்த்து ஆட்கொள்வான் அந்த இறைவனே!

அவன் புகழ்பாடி தெள்ளேணம் கொட்டாமோ - நம் கண்ணில் ஒளியாக நிலைநின்று அருளும் நாதனை நம் இரு கண் ஒளியை சேர்த்து தவம் செய்து பேரின்பம் பெருவோமாக என்கிறார். நம் மாணிக்கவாசக பெருமான்!

ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா

நூல் : திரு மணி வாசக மாலை

பக்கம் : 72

குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts