திங்கள், 14 ஜனவரி, 2019

போகி பண்டிகை - நம் உடலில்

நம் உடலில் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை அழுக்கே நிரம்பியிருக்கிறது!

மல ஜலம் மட்டுமல்ல தலை உச்சியில் கோழை கண்ணில் பீழை மூக்கில் களி காதில் அழுக்கு வாயில் எச்சில் தொண்டையில் நெஞ்சில் கபம் உடலெல்லாம் வியர்வை கைகால் நகங்களில் அழுக்கு இப்படி அழுக்கு மூட்டையே நம் உடம்பு!

தினமும் குளித்து புற உடலை தூய்மையாக்கினால் மட்டும் போதாது!

நல்ல ஆகாரத்தால் கூடுமானவரை எந்த அழுக்கும் வராமல் காக்கலாம்!

ஒரு சில மருந்து மூலிகைகாளால் இன்னும் ஓரளவு காக்கலாம்!

உடலில் எந்த அழுக்கும் வராமல் சேராமல் காக்க ஒரே வழி ஞான தவம்!

கண்ணை விழித்திருந்து தவம் செய்தால் ஏற்படும் சுத்த உஷ்ணம் உடல் முழுவதும் பரவி எல்லா அழுக்கையும் வெளியேற்றுகிறது!?

ஜன்ம ஜன்மாந்திரமாயுள்ள மும்மல அழுக்கையும் வெளியேற்றி நம் உடலை தூய்மையாக்கும்!

மலம் இல்லாத விமலன் இறைவன் நகர் நம் சிர நடு உள்போ!

தூய்மையாகு!

ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா

நூல் : மூவர் உணர்ந்த முக்கண்

பக்கம் : 65

குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts