ஞாயிறு, 26 ஜூன், 2016

சன்மார்க்கிகள் விபூதி பூசலாமா!?

சன்மார்க்கிகள் விபூதி பூசலாமா!?



சாதி , மதம் , இனம் என வேறுபாடு இல்லாமல் நல்ல விஷயங்களை ஏற்பதே சன்மார்க்கம். துவேசம் காண்பிப்பவன் , ஆணவம் கொள்பவன் சன்மார்க்கி அல்ல.

சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம்.“எம்மத நிலையிலும் நின் அருளே துலங்க கண்டேன் “ என வள்ளலார் பாடுகிறார்.

விபூதி வேண்டாமெனில் ஏன் தரும சாலையில் , சித்தி வளாகத்தில் விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள்?!

வள்ளல் பெருமான் இருந்த காலத்தில் விபூதி பூசியே பல அன்பர்கள் நோயினை தீர்த்துளார்கள். வள்ளல் பெருமானும் நெற்றியில் திருநீறு பூசியே இருந்தார்.

ஓரு முறை கடலூர் தேவநாதன் என்ற அன்பர் மகன் நோய்வாய்பட்டான். வள்ளல் பெருமானை எண்ணி வணங்கினார். அச்சமயம் தருமச்சாலையில் அன்பர்களோடு வள்ளல் பெருமான் உரையாடிக் கொண்டிருந்தார் .தேவநாதன் வேண்டிய அக்கணமே பெருமானார் அவர் வீடு சென்று மகனுக்கு விபூதி பூச நோய் குணமாயிற்று .வள்ளலார் போய்விட்டார். மறுநாள் குணமான தன் மகனுடன் வடலூர் வந்து அன்பர்களிடம் நடந்ததை கூற , தருமச் சாலையிலிருந்த அன்பர்களோ பெர்மான் நேற்று ழுழுவதும் எங்களுடன் தான் இருந்தார் வெளியே எங்கும் போகவில்லை என்றதும் ,வள்ளல் பெருமான் ஒரேநேரத்தில் இரு இடங்களிலும் இருந்ததை கண்ட அன்பர்கள் ஆச்சரியமுற்றனர்.

அவர்களின் வியப்புக்கு அளவேயில்லை !ஓடி வந்து காத்த அவர் கருணை உள்ளத்தை போற்றி புகழ்ந்தனர்!வணங்கி மகிழ்ந்தனர்!

வேட்டவலம் எனும் ஊர் ஐமீன்தாருக்கு இரு மனைவிகள் . ஒருத்திக்கு மகோதரம் நோய். மற்றொருத்தியை பிரம்மரட்சஸ் பிடித்திருந்தது. வள்ளல் பெருமான் அவர் மாளிகை போனார். வீட்டு வாசலில் கால் வைத்ததும் பிரம்மரட்சஸ் ஓடிவிட்டது !அடுத்த மனைவிக்கு விபூதிகொடுக்க அவரும் குணமானார்! வள்ளலார் திருவடிகள் வீழ்ந்து வணங்கினார்.வள்ளல் பெருமான் வேண்டுகோள்படி அவர் ஐமீனுக்குட்பட்ட எந்த கோவிலிலும் உயிர்பலி கொடுப்பதை தடை செய்தார்!

விபூதி பூசுங்கள்! தலை நீர் போகும் !விபூதி பூசாதவனுக்கு ஒன்றும் ஞானம் வராது!வள்ளல் பெருமான் எத்தனையோ அன்பர்களுக்கு விபூதி கொடுத்தே தீராத பிணி மற்றும் துன்பங்களை போக்கியிருக்கிறார்!

படிக்கவில்லையா?!”மந்திரமாவது நீறு ”என திருஞானசம்பந்தர் பாடல் பாடியிருக்கிறாரே தெரியாதா உங்களுக்கு? தருமச்சாலையிலே ,மேட்டுக்குப்பத்திலே பின் எதற்கு விபூதி கொடுக்கிறார்கள்?! வீண் வாதம் விதண்டவாதம் பண்ணாமல் வள்ளலார் வழியில் ஒளியிடலாகி மரணமிலா பெருவாழ்வடையும் வழியை தேடுங்கள்!

ஆதி சங்கரர் கூறுகிறார் , வீடு சுவருக்கு சுண்ணாம்பு பூசுவது போல , தூய வெண்ணீறு நம் உடலெல்லாம் பூச வேண்டும். சராசரி மனிதன் முடிவில் வெந்து வெண்ணீறு சாம்பல் ஆவதை குறிப்பதுவே இது. என்றும் உன் மனதில் இதை நிறுத்தி , எல்லாரையும் போல உன் உடலும் முடிவில் வெந்து சாம்பல் ஆகாமல் நிலைத்திருக்க வழியை தேடு என்பதே – வெண்ணீறு பூசுவத்தின் விளக்கமாம்.

வெண்ணீறு – விபூதி பசுஞ்சாணத்தை சுட்டு தயாரிக்கப்படுவது. பசுஞ்சாணம் மிக சிறந்த கிருமி நாசினி என்பது விஞ்ஞானம் ஒத்து கொண்ட உண்மை. நாம் அதை உடலில் பூசுவதால் உடல் நீரை எடுக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. பூசுவது நீறு திரு ஆலவயான் திருநீறே என ஞான சம்பந்தர் திருநீற்றுப்பதிகமே பாடியுள்ளார்.

வள்ளல் பெருமானும் நெற்றியில் திருநீறு பூசியே இருந்தார். சன்மார்கிகளே வடலூரில் சத்திய தரும சாலையில் தரும் விபூதியை வாங்கி நெற்றி நிறைய பூசுங்கள். வள்ளலார் அருள் தருவார். இது பக்தி என ஒதுக்கி விடாதீர். நீ என்ன பெரிய ஞானியா? அகங்காரம் பிடித்து அலையும் சாதாரண மனிதன் நீ.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் விபூதி பூசுவதும் பூசாததும் சன்மார்க்கம் அல்ல.

ஞான தவம் செய்ய “தகுந்த ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்று கொள்வது நலம்” என்று உரைத்த வள்ளலார் கூற்றுப்படி தியானம் செய்வதை விடுத்து விபூதி பூசுவது சுத்த சன்மார்கமா? விபூதி பூசாமலிருப்பது சுத்த சன்மார்க்கமா ? என வீண் வாதம் செய்து வீனே காலம் கழிக்காதீர்கள்.

திருநீறு என்பதன் அகப்பொருள் திரு + நீறு. இறைவன் திருவடி பட்டு வரும் நீர்.
நாம் கண்மணி ஒளியை நினைந்து , தீட்சையின் போது குரு கொடுத்த கண்மணி உணர்வை பற்றி கண் திறந்து தவம் செய்கையில் பெருகும் நீரே திருநீறு. அதாவது இறைவன் திருவடியான நம் கண்மணி ஒளியால் பெரும் நீரே திருநீறு.

இந்நீரால் நம் உடல் முழுவதும் நினைய வேண்டும். ஞான சரியையில் “உற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நினைந்து” என்று இதனையே வள்ளல் பெருமான் கூறுகிறார்.

உலக குரு வள்ளலாரை வணங்கி கை நிறைய விபூதியை எடுத்து வாய் நிறைய மகாமந்திரத்தை கூறி நெற்றி நிறைய இடுங்கள். ஞான தவம் செய்து இறைவன் திருவடியால் – கண்மணி ஒளியால் பெரும் “திரு”நீறால் உடல் முழுவது நினையுங்கள். உடலும் உள்ளமும் மணக்கட்டும். உயர்வு கிடைக்கட்டும். வடலூரார் வளம் எல்லாம் தருவார். கிட்டும் மரணமிலா பெருவாழ்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts