ஞாயிறு, 14 ஜூன், 2015

எப்போது ஆத்மா நமக்கு குரு??


சன்மார்க்க நெறி நின்று மனதை இரு கண்மணி ஒளியில் நிறுத்தி தவம் செய்து
வந்தோமானால்! குரு உபதேசம் தீட்சை மூலம் தெளிந்த சீடன் தொடர்ந்து தவம் செய்ய செய்ய இரு கண்ணும் உள் சேரும் அக்னிஸ்தானமே நம் ஆத்மஸ்தானமே இறை சொருபம் தான் என்பதை கண்டு கொள்ளலாம்! பின் நான் ஆகிய சிவமே ஒளியே நமக்கு குரு ஆகிவிடும்!

நம் உள் ஒளியே ஆத்மாவே நமக்கு குருவாம்! ஒவ்வொருவரும் தத்தம் தனது ஜீவனையே குருவாக அடைய வேண்டும்! அவனே ஞானி! தத்தம் குருவாக விளங்கும் அவன் யார்?

சாட்சாத் இறைவன் தானே! அந்த சிவம் தானே குரு! சித்தத்தை சிவனிடம் வைத்து சும்மா இரு!

இதுவே இறைவனை சேரும் வழி !

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்  அய்யா 
www.vallalyaar.com

1 கருத்து:

Popular Posts