செவ்வாய், 23 நவம்பர், 2010

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க

மெய்பொருள் சித்தர் பாடல்கள் பெரிய ஞானக்கோவை
 
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர், பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே, அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர், எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே, இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன், இடதுகண்கள் சக்கரம் வலக்கை சூல மான்மழு, எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம், உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லீரோ” – சிவவாக்கியார்

எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே, மனம் ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே” – இடைக்காட்டுச் சித்தர் (8-சூரியன், 2-சந்திரன்)

எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல், கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்கலம், கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும், விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம்” – பத்தரகிரியார்

வட்டவிழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக் கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம்” – பத்தரகிரியார் [மெய்ஞ்ஞானப் புலம்பல்]

கண் நிறைந்த கணவன், மைய லழகீ ரூரோற்றி, வைத்தீ ருளவோ மனையென்றேன், கையி னிறைந்த தனத்தினிந்தங், கண்ணி னிறைந்த கணவனையே, மெய்யின் விழைவா ரொருமனையோ, விளம்பின் மனையும் மிகப்பலவாம், எய்யி லிடையா யென்கின்றா, ரிதுதான் சேடி யென்னேடி” – திருவருட்பா

கண்ணே கண்மணியே கண்ஒளியே கண்ணுட் கலந்து நின்ற கதிரே அக்கதிரின் வித்தே” – திருவருட்பா 2096

பரமன் ஈன்றகண்ணே நின் தணிகைதனை கண்டு போற்றேன்” - திருவருட்பா 300
என் இரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி” – திருவருட்பா 550
கண்ணினால் உனது கழற்புதம் காணும் கருத்தினை மறந்து” – திருவருட்பா 1049
சொல் ஆர்ந்த விண்மணியை என் உயிரை என் மெய்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது” - திருவருட்பா 1278
தண்ணார் அளியது விண்ணோர் ஒளியது சாற்று மறைப்; பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர் தீக்; கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டு கொள்ள; ஒண்ணா நிலைதொன்றுண்டே முக்கண்ணொடென் உள்ளகத்தே” – திருவருட்பா 1383
கண்ணே அக்கண்ணின்மணியே மணியில் கலந்தொளிசெய் விண்ணே” – திருவருட்பா 1392
கண்ணின் மணிபோல் இங்குநிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றியதாம்; பண்ணின் மொழியாய் நின்பால்ஓர் பறவை வேண்டினம் படைத்தால்; மண்ணின் மிசையோர் பறவையதாய் வாழ்வாய் என்றார் என்னென்றேன்; எண்ணி அறிநீ என்கின்றார் இதுதான் சேடி என்னே டீ” – திருவருட்பா 1796

திருவருட்பா இரண்டாம் திருமுறையில் இங்கிதமாலை என்னும் தலைப்பில் இதுபோல் 100 பாடல்கள் உள்ளது. இங்கிதமாக சொன்னது இது, இதனை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது! சிந்திப்பவர்களுக்கே விடை கிடைக்கும்.
என் இருகண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார்தான் செய்வர்” – திருவருட்பா 2770
வள்ளலார் தன் இரு கண்களாலும் செய்தபெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்! நமது மெய் எனப்படும் உடம்பில் விளங்கு கண் எனப்படும். இதல்லாமல் வேறு விளக்கு இல்லை என பெரியோர்கள் எல்லாரும் சொல்கிறார்கள் என வள்ளலார் சொல்கிறார்.”கண்ணே சரீரத்தின் விளக்குஎன இயேசுவும் சொல்வதை கவனியுங்கள்.

இறைவ நின தருளாலே எனைக் கண்டு கொண்டேன்; எனக்குள் உனைக் கண்டேன் பின் இருவரும் ஒன்றாக உறைவது கண்டு அதிசயித்தேன்” – திருவருட்பா 3051
காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்” – திருவருட்பா 3125கண்ணிலே எனது கருத்திலே கலந்து கருத்தனே” – திருவருட்பா3557
அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம், என்னிதய கமலத்தே இருந்தளுந் தெய்வம், என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம், தூண்டாத மணி விளக்காய் துலங்குகின்ற தெய்வம், சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம்” – திருவருட்பா 3910
காணாத காட்சியெல்லாங் கண்ணிற்கண்டு காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்” – காகபுசுண்டர்
கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண்ணுமுயிர் பதியுமாறு” – காகபுசுண்டர்
நேத்திரத்தை காகம்போல் நிச்சயமாய் நிற்க ஆத்துமத்தில் ஆனந்தமாம்” – காகபுசுண்டர்
பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாது” “தனித்திரு பசித்திரு விழித்திரு
பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும்” “ஆன்ம விள்க்கமே சுத்த ஆறிவு நிலை
கண்ணுலே நின் அடியார் தமையும் நோக்கேன், கண்மணிமாலைக் கெனினும் கனிந்து நில்லேன்” – திருவருட்பா 1371
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” – திருக்குறள்
நான்கு நிலைகள்
சரியைஅங்கம் துலக்கி ஆலயம் தொழுவது, அதன் முடிவுசாலோகம், பக்தன்தாச மார்க்கம்

கிரியைஅஷ்டாங்க பூஜை முதலியன செய்தல், அதன் முடிவுசாமீபம், கர்மவான்சத்புத்திர மார்க்கம்


யோகம் - பிராண வாயுவை கட்டுப்படுத்தி சாதனை புரிதல், அதன் முடிவுசாரூபம், யோகிசகமார்க்ம்


ஞானம் - தான் இன்னதென்று அறிந்து அம்மயமாதல், அதன் முடிவுசாயுச்சியம், ஞானிசன்மார்க்கம்


சரியைகிரியையோகம்ஞானம் இவை ஒவ்வொன்றும் நான்காக பிரிக்கப்பட்டு மொத்தம் 16 படி நிலை உருப்பெற்றுள்ளது. அவை சரியையில் சரியை,சரியையில கிரியை, சரியையில யோகம், சரியையில ஞானம் என்றும் சரியையில் முக்தி சாலோகப் பதவி என்றும், கிரியையில் சரியை,கிரியையில கிரியை, கிரியையில யோகம், கிரியையில ஞானம் என்றும் கிரியையில் முக்தி சாமீப பதவி என்றும், யோகத்தில் சரியை,யோகத்தில கிரியை, யோகத்தில யோகம், யோகத்தில ஞானம் என்றும் யோகத்தில் முக்தி சாரூப்ப பதவி என்றும், ஞானத்தில சரியை,ஞானத்தில கிரியை, ஞானத்தில யோகம், ஞானத்தில ஞானம் என்றும் ஞானத்தில் முக்தி சாயுச்சியப் பதவி என்றும் சாஸ்திரம் கூறும்.


திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஜீவர்கள் மேல் கொண்ட கருணை இரக்கம் காரணமாக 13ஆவது படியாக உள்ள ஞானத்தில் சரியை நிலையைச் சொல்லி மக்கள் மேன்மையடைய வழிகாட்டினார், நல்ல நெறி காட்டினார். இப்போது எல்லா பல்கலைக்கழகங்களும் குறிப்பிட்ட வயது வந்தோர் யாரும் பட்டப்படிப்பு தேர்வு எழுதலாம் என்றும் அதற்கு உதவியாக வீட்டிலிருந்தே படிக்கவும், அஞ்சல் வழிக் கல்வியும் பயிற்றுவிக்கிறார்கள் அல்லவா?, ஞானம் பெற விருப்பம் ஆர்வம் உள்ளவர்களே தகுதியானவர்கள் பக்குவர்கள் என்றும் அவர்கள் அனைவருமே 13ஆவது நிலைக்கு வரலாம் என்று வள்ளல் பெருமான் எங்கள் குரு திரு சிவசெல்வராஜ் அவர்கள் கருவியாக கொண்டு திருவடி தீட்சை அளிக்கிறார். மெய்பொருளின் வாசல் கண்தான் என்று தெளிந்தாலும் திருவடி தீட்சை பெற்று நம்முள் உள்ள ஒளியாக நடனமிடும் ஜீவனாகிய இறைவனை உணர்ந்து. அவ்வுணர்வை மேலிம் மேலிம் சாதகன் தன் தவம்செய்து பெருகினால் மட்டுமே மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய முடியும். இதனை வள்ளல் பெருமான் ஞானசரியையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்ததும் நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே” – திருவருட்பா 5576

கண்ணே சரீரத்தின் விளக்காய் உள்ளது, உன் கண் ஒளியுள்ளதாய் இருந்தால் உன் சரீரமும் ஒளி உள்ளதாய் இருக்கும், தேவன் ஒளியாய் இருக்கிறார், நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்” – பைபிள்

காயத்துள் நின்ற இறைவனைப் பார்க்க உணர அடைய நம் பாரத நாட்டின் ஞானிகள் கூறிய இரகசியங்களை வெளிப்படையாக கண்மணி மாலை எனும் ஆன்மீக புரட்சி நூலை 21-03-1992 அன்று வெளியிட்டார். உடலுக்கு நூழைய வாசல்கண்தான்! கண்ணைத்தான் ஞானிகள் மெய்பொருள்திருவடிஎன்றும் இன்னும் பற்பல பெயர்களிலும் பரிபாஷையாக கூறியிருக்கிறார்கள்! கண் மூலமாக எப்படி இறைவனை அடைவது என்ற வழிமுறைகளையும் சொல்லி வைத்துள்ளனர். அவைகளை விரிவாக கண்மணிமாலை நூலில் முழுமையாக தந்துள்ளார் இதுதான் ஒரே வழி! உலகின் எந்தப் பகுதியிலுள்ள ஞானியானாலும் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்! முடிந்த முடிவான நிலை அடைய இதுவே வழி! இதைத்தவிர வேறொன்ருமில்லை?… நம்புங்கள். நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு. ஞானிகள் நூற்களைப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விளக்கங்களை உள்ளே அறிந்து மனதில் நிறுத்துக! அறிவார் அறிவர்! அறிவால் அறிவர்!

இறைவன் நம் கண்ணின் மத்தியில் ஊசிமுனை அளவு உள்ள துவாரத்தில் சிறு ஜோதியாக துலங்குகிறான். நம் கண்மணியின் மத்தியிலுள்ள அந்த சிறு துவாரம் ஒரு ஜவ்வால் அடைபட்டுள்ளது! இறைவனை மறைத்து இருக்கிறது. இந்த ஜவ்வானது 7 மெல்லிய ஜவ்வுகளால் இணைக்கபட்டு ஒரு ஜவ்வாக அடைபட்டுள்ளது. இந்த அகநிலையை தான் வள்ளலார் அப்பட்டமாக தைப்பூச தினத்தன்று 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டினார். பூமி தன்னைத் தானே சுற்றுவதுபோல கண்மணியும் சுற்றுகிறது! பூமி சுழல்வதற்கு ஆதாரம் அதன் உள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புதான். கண்மணியும் அதன் மத்தியில் உள்ள, ஊசிமுனை துவாரத்தினுள் உள்ள சிறு ஜோதியால்தான் சுழல்கிறது! பூமி எப்படி அந்தரத்தில் உள்ளதோ அதுபோலவே கண்மணியும் கண்ணின் கரு விழிக்குள் பிராண நீரில் மிதந்து கொண்டுதான் இருக்கிறது! ” பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீஎன சித்தர் உரைத்தது கண்மணியைத்தான்! “காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்என திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்,

உடம்பினுக் குள்ளே ஒரு பொருள் கண்டேன்,

உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று,

உடம்பினை யான் இருந்தோம்புகின்றேனே;

உடம்பார் அழியின் உயிரார் அழிவார்,

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்,

உடம்பினை வளர்க்கும் உபாயம் அறிந்தே,

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே;

நடுவு நின்றார்க்கன்றி ஞானமும் இல்லை,

நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை,

நடுவு நின்றார் நல்லை தேவருமாவார்,

நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே,

உள்ளம் பெருங்கோயில், ஊணுடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானாக்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்,

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கு” – திருமூலர்

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை,

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,

எல்லாம் விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு,

அன்பும் அறனும் உடைத்தயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது,

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியமில்லை உயிர்க்கு,

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு,

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான், மற்றயார் செத்தாருள் வைக்கப் படும்” – திருக்குறல்

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம், வேறொருவர்க்கு எட்டாத புஷ்பம், இறையாத தீர்த்தம், இனி முடிந்து கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே, முட்டாத பூசையன்றோ என் குரு நாதன் மொழிந்ததுவே” – பட்டினத்தார்

வாசிதனை பார்த்து மகிழ்ந்துனை தான் போற்றாமல், காசவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே; உடலுக்குள் நீ நின்று உலாவினதை போற்றாமல், கடல் மலை தோறும் திரிந்து காலலுத்தேன் பூரணமே; எண்ணாத தூரமெல்லாம் எண்ணி எண்ணி, பாராமல் கண்ணாடிக்குள் ஒளிபோல் கண்டறிவதெக்காலம்” – பத்ரகிரியார்

தொட்டவுடன் சுட்டுவிடும் எங்கள் பஞ்சாட்சரமே,

சுறு சுறுப்பும் உயிருள்ளதும் எங்கள் பஞ்சாட்சரமே,

ஒட்டி ஒட்டாதேயுள் ஒங்கும் பஞ்சாட்சரமே,

ஒது மறை வேதமெல்லாம் ஒலிக்கும் பஞ்சாட்சரமே,

நீல மலையை நிஜதேவ தெய்வமதை,

சேல் விழியில் கண்ட திருக்கட்சியை யான் மறவேன்,

தோராத உச்சிவட்ட தேனாறு பாயுகின்ற பார ரகசியத்தின் பழம் பொருளை யான் மறவேன்,

சண்முகனும் நான்முகனும் சராசர பொருளனைத்துட் என் முகத்தில் காட்டிவைத்த என் குருவை யான் மறவேன், சாதிகுலம் பாராது தானிருந்த தெய்வமதை பாதி மதி சூடி நின்ற பரம் பொருளை யான் மறவேன், அண்ட பகிரண்ட மெல்லாம் தொண்டர் இதயத்தின் மனக் கண்ணாடிக் குள்ளிருந்த காரணத்தை யான் மறவேன்” – மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்

தேவனுடைய ஆலயம் பூட்டும் சாவியும் இல்லாமல் இருக்கிறது” – ஏசு பெருமான்

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவான் தம்மை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான் கினும் மெய்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயமே” – திரு ஞான சம்பந்தர்

ஆத்தானை எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தானை மாதுளம் பூ, நிறத்தாளை புவியடங்க காத்தாளை, அங்கையிற் பாசாங்கு சமும் கரும்பும், வில்லும் சேர்த்தாளை முக்கண்ணியை, தொழுதார்க்கு ஒரு தீங்கில்லையே” – அபிராமி பட்டர்

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா, பேசும் பொற் சித்திரமே, காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும், ஒடி விளையாடு பாப்பா, நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா” – மகா கவி பாரதியார்

ஒடி ஒடி ஒடி ஒடி உட்கலந்த ஜோதியை, நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய், வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள், கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே; அஞ்செழுத்திலே பிறந்து, அஞ்செழுத்திலே வளர்ந்து, அஞ்செழுத்தை ஒதுனின்ற பஞ்ச பூத பாவிகாள், அஞ்செழுத்தில் ஒரெழுத்தை அறிந்து கூற வல்லிரேல், அஞ்சல் அஞ்சல்லென்று நாதன் அம்பலத்தில் ஆடுமே” – சிவ வாக்கியர்

பச்சை மாலை போல் மேனி பவள வாய், கமலச் செங்கண் அச்சுதா அமரர் ரறே, ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை, வரினும் வேண்டேன் இந்திரலோகம் ஆளும், அச்சுவை பெரினும் வேண்டேன், அரங்கமா நகருளானே” – பெரியாழ்வர்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய், மருவாய் மலராய் மணியாய் ஒளியாய், கருவாய் உயிராய் கதியாய் விதியாய், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” – சுந்தரணு பூதி

செத்திடமும் பிறந்திடமும் இனிச்சாகா, திருந்திடமும் அத்தனையும் அறியாதார், அறியும் அறிவு எவ்வறிவோ, ஒத்தை நிலம் ஒத்த பொருள் ஒரு பொருளாம், பெரும் பயனை அத்தன் எனக்கு அருளியவார், யார் பெறுவார் அச்சோவே” – மாணிக்க வாசகர்

உச்சிக்கு நேராய் உண்ணுக்குக்கு மேல் நிதம் வைத்த விளக்கு எரியுதடி அச்சுள்ள விளக்கு வாலையடி அவியாமல் எரியுதடி வாலைப் பெண்ணே” – கொங்கணவர்

இங் அங்கெண்ணாதபடி எங்கும் பிரகாசமாய் ஆணந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்த அதுஎது?” – தாயு மாணவர்

சத்தியமே பராபரமே என்றே தெய்வம், சகல உயிர் ஜீவனுக்கு அது தானாச்சு, புத்தியினாலறிந்தவர்கள் புண்ணியோர்கள், பூதலத்தில் கோடியில் ஒருவருண்டு, பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார், பாழிலே மனதை விடார் பரம ஞானி, சுத்தியே அலைவதில்லை சூட்சம், சுழியிலே நிலையறிந்தால் மோட்சம் தானே” – அகஸ்தியர்

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே, ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு, ஜோதியந்த நடுவீடு பீடமாகி, சொகுசு பெற வீற்றிருந்தான் துரைபெண்ணாத்தாள், வீதியந்த ஆறு தெரு அமர்ந்த வீதி, விளையாடி நின்ற திருமாளிகை கண்மாய், பாதி மதி சூடியே இருந்த சாமி, பத்து வயதாகு மிந்த வாமிதானே, காமி வெகு சாமி சிவகாமிருபி, காணரிது சிறு பிள்ளை கன்னி கன்னி, வாமியிவளை மர்மம் வைத்து பூசை பண்ண, மதியுனக்கு வேணுமடா அதிகமாக, ஆழிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர், அறிந்தாலும் மனமடக்கம் அறிய வேனும், நாமிவளை நினைத்தவாறு பூசை பண்ண, நாட்டிலே சொல்ல வென்றால் நகைப்பார் தானே” – கருவூரார்

உச்சிக்கு நேராய் உண்ணாக்குக்கு மேல் நிதம் வைத்த விளக்கு எரியுதடி அச்சுள்ள விளக்கு வாலையடி அவியாமல் எரியுதடி வாலைப்பெண்ணே” – கொங்கணவர்

நிழல் சாயா மெய்யுடம்பு பொய்யுடலில் எங்கே எட்டிரண்டான சஞ்ஜீவி அது எட்டாதவனை எட்டி மிதிக்கும் சஞ்ஜீவி” – மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்

அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் பொருட் சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் சிற் சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்; நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே ஞான நடத்தரசே என்னுயிர் நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்ததும் வம்மின் உலகியலீர் மரண மிலா பொருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

கண்டதெல்லாம் அனித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, உண்டதெல்லாம் மலமே, உட்கொண்டதெல்லாம் குறையே, உலகியலீர் இது வரையும் உண்மை அறிந்திலரே, விண்டதினால் எண்ணில் நீர் சமரஸ சன்மார்க்க மெய்நெறியை கண்டுபிடித்து மெய்ப்பொருள் நன் குணர்ந்து என்தகு சிற்றம்பலத்தே எந்தை அருளடைமின் இறைவாத வரம் பெறலாம் இன்புறலாமே எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி” – திரு அருட்பா

பச்சை மாமலை போல் மேனி பவளவாய், கமலச் செங்கன் அச்சுதா அமரர் ஏறே” – பெரியாழ்வார்

ஒமித்யேகாட்சரம் ப்ரஹம வயாஹரன் மாம்னுஸ் மரன்ய ப்ராயாதி த்விஜன் தேஹம் சயாதி பரமாம் கதிம்” (மரணகாலத்தில் இரு புருவ மத்தியில் ப்ராணன் முழுவதையும் வைத்து யார் என்னை நினைக்கிறார்களோ அவர்கள் என்னை வந்து அடைவார்கள் இது சத்தியம்) – பகவத்கீதை

வடலூரில் வாழும் சிற்றம்பலத்தே என் கண்ணின் மணியே, கரு மணியே, குரு மணியே, மாணிக்க மணியே, நடனசிகா மணியே, நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே, உடம்பினை பெற்ற பயனாவ தெய்வம் உடம்பினுள் உத்தமனை காண்” – ஔவையார்

நெல்லி இருக்குது காட்டுக்குள்ளே, கருநெல்லி இருக்குது வீட்டுக்குள்ளே, பூட்டை திறப்பது கையாலே, மனப் பூட்டை திறப்பது மெய்யாலே” – ஞானக்கும்மி

தண்முக துய்யமணி உண்முக சைவமணி ஷண்முக தெய்வமணியே, நடு இரவில் என் எழுப்பி பொருளுணவு தந்த தாயே” – வள்ளலார்

முத்தி வருந்தி நீ தேடு அந்த மூலம் அறிந்திட வா முத்தி வீடு, எங்கும் சுயம் பிரகாசன் அன்பர் இன்ப இருதயத் திருந்திடும் வாசன்” – கடு வெளி சித்தர்

திருவடி வைத்து திறம் அது பொருளென, உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில், தெவிட்டா ஞான தெளிவையும் காட்டி, கடையில் சுழிமுனை கபாலமும் காட்டி, மூலாதாரத்தின் மூண்டெழும் கணலை காளலெழுப்பும் கருத்தரி வித்தே, அமுதே நிலையமும் ஆதித்தன் இயக்கமும், இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும், உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி, அணுவிற்கணுவாய் அப்பாலுக் கப்பாலாய், கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி, பேழை வயிறும் பெரும் பாரக் கோடும், நெஞ்சில் குடி கொண்ட நீலமேனியும்” – ஔவையார்

நெற்றியில் இயங்குகின்ற நீலமாம் விளக்கினை உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த ஜோதியை” – சிவ வாக்கியர்

மூலத்துதித் தொழுந்த முக்கோண சக்கரத்துள் வாலை தனை போற்றாமல் மதி மறந்தேன் பூரணமே” – பட்டிணத்தார்

தலையுடன் உடல் கால் கரம் வேறதாய் நிலை வணக்க பெருந்தவ மாமிது அலை வறுத்து அரங்கம் புகுந்தவர் மலையரன் மகள் மணவாளரே” – சாலை ஆண்டவர்கள்

போக்கும் வரவும் புறம்பும் உள்ளுமாகி நின்று தாக்கும் ஒரு பொருளை சந்திப்பது எக்காலம்; வீடு விட்டு பாய்ந்து வெளியில் வருவார் போல கூடு விட்டு பாயும் குறிப் பறி வதெக்காலம்; ஒட்டாமல் ஒட்டி நிற்கும் உடலும் உயிரும் பிரித்தே எட்டா பழத்துக்கு இங்கு ஏனி வைப்பது எக்காலம்” – பத்ரகிரியார்

சாகாமற் கற்பதே கல்வி தனை பிறர் ஏவாமல் உண்பதே உண்” – ஔவையார்

நீ மீண்டும் பிறவாவிட்டால் பரலோக சாம்ராஜ்யத்தை அடைய முடியாது” – ஏசு பெருமான்

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும், காற்றை பிடிக்கும் கணக்கறிவாளரில், காற்றை பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு, கூற்றை உதைக்கும் குறி அதுவாமே” – திருமூலர்

தூணை சிறுதுரும்பாக தோன்றிட செய்வோம், துருபபை பெருந்தூணாக தோற்ற செய்குவோம், ஆணை பெண்ணும் பெண்ணை ஆணும் ஆக செய்குவோம், ஆரவாரித்து எதிராய் ஆடு பாம்பே, எட்டு நாகம் தன்னை கையில் எடுத்து ஆட்டுவோம், இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம், கட்டுக் கடங்காத பாம்பை கட்டி விடுவோம், கடும் விஷம் தன்னை கக்கி ஆடு பாம்பே” – பாம்பாட்டி சித்தர்

வேறக தானிருந்த வண்ணம் சொல்வேன், வேண்டியே கைவேறு கால்வேறய், நேராக உடல் வேராய் தலை வேராய், நேர்மையுடன் பூமி தனில் சித்து” – போகர் 7000

காலனை காலால் உதைத்தவளாம், வாலை ஆலகால விஷமுண்டவளாம், மாளா ஜெகத்தை பதைத்தவளாம், இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம்” – கொங்கணவர்

காவு கொடுவோர்கள் வினை காலனை, காலன் அணுகாதபடி காலனை காலாலுதைத்த கருணேசா” – ஸ்ரீ காக புசுண்டர்

அல்லல் வாசல் ஒன்பது, அறுத்தடைந்த வாசலும், சொல்லும் வாசல் ஒர் ஐந்துமே, சொம்மி விம்மி நின்றதும், நல்ல வாசலை திறந்து, ஞான வாசல் ஊடு போய், ஆட்டு காலிரண்டினுள்ளே, அமர்ந்திருப்பதெக்காலம்” – பத்ரகிரியார்

உன் நினைவெண்னும் ஆகாயத்துள் அவர்க்கம் கட்டப் பெறுகிறது; நெருப்பாறு மயிர் பாலம் உள்ளொளி பெருக்கி உவப்பிலா ஆனந்தமாய் ஞானப் பால் உறிஞ்சணும், சிற்சபையில் புகுந்தருணம் இதுவே; ஆலய பிரவேசம் தெய்வ தேடு கூடகம், சாலை கழுவி வீட்டுக்குள் செல்லுதல்

இந்த எல்லை உலகத்தை எல்லாம் விழுங்கி நிற்கின்ற எல்லை இதன் பெயர் மெய்ந்நகரம். இந்த மெய்குருபிரானைசந்தித்தால் மறுபிறப்பு என்னும் தேவபிறப்பில் ஆக்கி உயிர்ப்பித்து எழுப்புவார்கள். அவர்கள் உனக்கு அன்பினுடைய ரகசியத்தையும் மெய்துறவினுடைய ரகசியத்தையும் அறிவிப்பார்கள். அப்போதுதான் அவர்கள் இந்த உலகங்களையெல்லாம் கடந்தவர்கள் என்று உனக்கு நிச்சயமாகத் தெரியும்.அங்கே மத்திய பார்வையாய் அவர்கள் சிம்மாசனப்பிரகாசம் பகிரங்கித்துக் கொண்டிருக்கிறது. உன்னதமான அவர்கள் அதில் வீற்றிருக்கின்றார்கள். கோடிக்கணக்கான சூரியர்கள் அவர்களுடைய திருமேனியின் ஒரு ரோமத்திலிருந்து எழும்பி விரிக்கும் இருதய விளக்கப் பிரகாசத்தைக் கண்டு நாணுகின்றன. அங்கே தலைநகரத்திலே நித்திய அழியாத ஜீவ ஊற்றானது அவர்களுடன் விளையாடிப் பேசிப் பாடிக்கொண்டிருக்கிறது. அந்த எல்லையை அடைந்து அறிந்தவரகள் தான் அதனைத் தெரிந்து கொள்வார்கள். இது வரைக்கும் ஞானிகள் அறிந்தவர்கள் தான் அதனைத் தெரிந்த கொள்வார்கள். இது வரைக்கும் ஞானிகள் அறிந்தும் கேட்டதும் இல்லை. அவர்களை அடைந்தவர்கள் எல்லாம் பிரப்பு இறப்புகளிலிருந்து விடுவிக்கப் பெறுவார்கள். மாயத்திரைகள் உன்னுள் 7-உள்ளன. மாயத்திரை மறைப்பிக்கும் திரைகள். இவற்றைக் கடந்தால் தான் உள்ளே சென்று சிவ தரிசனம் செய்ய முடியும் என்று பொருள். இதற்குமேலும் ஒரு ரகசியம் விளக்கமும் உண்டு. இந்த வாயில் நிலை அமைந்து உள்ள இடத்தில் இடது, வலதில் காற்று ஒட சாளரம் (சன்னல்) அமைப்பு உண்டு. இந்த சாளரத்திற்கு அருகே இரண்டு மாடம் (குழியான அமைப்பு) உண்டு. சம தரையில் இருந்தால் குழி. பள்ளம் உயர்ந்த சுவற்றில் இருந்தால் மாடம். இந்த இரண்டு மாடந்களும் இரண்டு கண்களைக் குறிக்கும். மேழும் இந்த இரண்டு மாடங்களே சிற்சபை, பொற்சபையாகும். வாயில்நிலையே ஞான சபையாகும்.


¾Â×


3 கருத்துகள்:

  1. கண்மணிமாைல நூல்எங்குகிைடக்கும்

    பதிலளிநீக்கு
  2. Please follow this.. http://www.vallalyaar.com/

    You visit Ayya
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    பதிலளிநீக்கு

Popular Posts