ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சூக்கும உடலை அடைந்தவன் புத்திமானாவான்!



எட்டாம் தந்திரம்

"அத்த னமைத்த வுடலிரு கூறினிற்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமா னாங்காரம் புரியட்ட காயமே"

திருமந்திரம் பாடல் - 2123

உலக மக்கள் அனைவருக்கும் அத்தன் - அனைத்துமானவன் - இறைவன், தான் உயிராக உடலினுள் நின்று அருள்கிறான்!  அப்படி அவன் அமைத்த உடல் இரண்டு கூறாக உள்ளது! நாம் பார்க்கின்ற நமது ஸ்தூல உடல்! இதற்குள் அமைந்த சூக்கும உடல்! என இரண்டு! 

சூக்கும உடல் ஸ்தூல உடல் தோற்றம் போலவே வெள்ளொளியென விளங்கும் புகை படலம் போன்றது! இது சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்தினையும் உணர வல்லதாகும்! சத்தம் காதால் கேட்பது. பரிசம் உடலால் உணர்வது. ரூபம் கண்ணால் பார்ப்பது. ரசம் வாயால் சுவைப்பது. கந்தம் மூக்கால் நுகர்வது என பஞ்சேந்திரிய செயலாகும்! 

சூக்கும உடலை அடைந்தவன் புத்திமானாவான்! ஆங்காரம் உள்ளவன் - செயலாற்றும் திறன் படைத்தவன். தலைக்கனம் கொண்ட ஆணவக்காரன் அல்ல! இதுவே புரியட்டகாயம் எனப்படும்! ஔவையார் விநாயகர் அகவலில் புரியட்டகாயம் புலப்பட எனக்கு தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி என பாடுவதை காண்க!

                     🔥அருளியவர்🔥: 

       ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,

        ஞானசற்குரு சிவ செல்வராஜ் 

                          🔥அய்யா🔥

           www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts