ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

இரு கண் சேரும் இடமான ஆத்மஸ்தானமே

  எட்டாம் தந்திரம்

"எண்சாண ளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கா லுடலிற் கரக்கின்ற கைகளில்|
புண் கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண் பாலுடம்பு தன்னாலுடம் பாமே"

திருமந்திரம் பாடல் - 2127

எண்சாண் உடம்பு! நமது உடல் அளவு இதுதான்! அவரவர் கையால் அளந்தால் ஒரு சாண் ஒருகையளவு எட்டுகையளவுதான் எண் சாண்தான் உடம்பு! எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்! தலையே நம் உடலில் தலையாயது! முக்கியமானது! ஏனெனில் உயிர் நம் சிரநடுவுள் தான் உள்ளது! கண்கால் - நம் கண்களே இறைவனின் கால்கள். திருவடி! அதனால் தான் கண்கால் என்றார் திருமூலர்! 

நமது உடலில் கரக்கின்ற கை - தலையில் உள்ள கை நம் இரு கண்களே! நமது கண்கள் தான் நமது கை, இறைவனுக்கு கால்! பரிபாஷை இரகசியம்! நமது வலக்கை வலது கண் இடக்கை இடது கண் இரண்டையும் குவித்து இறைவனை தொழுதால்! இரு கரம் சேர்த்து தானே கும்பிட வேண்டும்! இரு கண் இணைந்தால், உள்ளே இரு கண் சேரும் இடமான ஆத்மஸ்தானமே புண் கால் நாம் சேர வேண்டிய மூன்றாம் இடம்! முச்சுடரும் சேர்ந்த நிலை! 

அது 8 கலை உடைய அக்னி! 8ன் விரிவு, 8x8 64 கலையாகும்! இரு கண் உள் சேர்ந்தால் வலது சூரிய கலை 12-ம் இடது சந்திர கலை 16-ல் 12 உடன் சேரும் எஞ்சிய 4 கலை அக்னி கலையின் 64 கலையுடன் சேர்ந்து 68 கலையாகும்! அப்போதுதான், சூரிய சந்திர கலை இணைந்து அக்னி கலையுடன் சேரும்போதுதான் ஆத்மஜோதி தரிசனம் கிட்டும்! புணர்தல் என்றால் சூரிய சந்திர கலைகள் இணைதல்! புணர்ந்து அக்னி கலையுடன் சேர்வதால் இது புண் கால் அறுபத்தெட்டு ஆத்மஸ்தான அவ்வுடலே சூக்கும உடல் - யாக்கை எனப்பட்டது! 

அங்கே தான் நன்மைதரும் பால்-அமுதம் கிட்டும் எனவே தான் நண் பால் உடம்பு என்றார் திருமூலர்! அதுயார்? இறைவன் தன்னால் நமக்கு அருளப்பட்ட உடம்பு! சூக்கும சரீரம்!- புரியட்டகாயம்!

                              🔥அருளியவர்🔥: 

       ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா

                            www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts