திங்கள், 22 ஏப்ரல், 2019

பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்






ஶ்ரீ இராமாவதார முடிவில் தன்னோடு சராசரங்களிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்தி கொடுத்து வைகுந்த வாழ்வருளி பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார்!!

ஶ்ரீ ஆஞ்சநேயர் ஒருவரைத் தவிர!! இராமா, வைகுந்தம் வந்து சுகமாய் வாழ்வதை விட இந்த பூலோகத்தில் இருந்து இராம நாமம் ஜபித்துக் கொண்டிருப்பதே இன்பத்திலும் இன்பம் பேரின்பம் என்றுரைத்து இங்கேயே தங்கி விட்டார்.! ஆஞ்சநேயர்!!

சிரஞ்சீவியான அவர் திரேதாயுகம் முடிந்து துவாரயுகத்திலும் ஶ்ரீமந் நாராயணனின் ஶ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணுற்று பேருவகை கொண்டார்.!

இன்றும் வாழ்கிறார்! கண்ணனை எண்ணி தவம் செய்வோர் துன்பம் போக்கி ஆன்மீகத்தில் உன்னத நிலையடைய கூடவே இருந்து காத்தருள்கிறார்.!

பக்திக்கு இலக்கணம் ஶ்ரீ ஆஞ்சநேயர்தான்! பரமபதம் போக வழி காட்டுவார்!!

கண்ணனை காண விழைந்தால் அனுமன் உதவுவான்! கண்ணன் நம் கண்களிலல்லவா இருக்கிறான்! காணுங்கள் கண்ணனை உங்கள் கண்களிலேயே.

ஆன்மீகச்செம்மல் ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா.

நூல்:பரமபதம்
பக்கம்:91

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts