ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

பக்குவம் இல்லை

நீச்சல் கற்றுக்கொண்டு குளத்தில் இறங்கலாம் என்றால்
முடியவே முடியாது. முதலில் குளத்தில் குதி தையத்தக்க
என கையையும் காலையும் ஆட்டி அசைத்து நீச்சல் கற்று விடலாம்!

எனக்கு  பக்குவம் இல்லை பக்குவம் வந்த பின் தீட்சை
பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்பவனும் இது போன்ற மடையனே!

இந்த உலகில் அனைவரும் பாவிகள் தான்!  நீ பாவம் செய்ததால் தானே இங்கு பிறந்து பிறந்து இருக்கிறாய்?

பாவிகளே மனந்திரும்புங்கள் என ஏசு பெருமான் நூற்றுக்கு நூறு உண்மையான செய்தியை கூறியிருக்கிறார்!

ஏ மனிதனே, பாவியே உன் பாவம் தொலைய
இறைவன் திருவடியை சரணடை! அது உன்கண் தான் என்பதை அறி!
குருவழி தீட்சை பெறு!

- ஞான சற்குரு சிவசெல்வராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts