புதன், 7 செப்டம்பர், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 9


முதலே
ஆதியுநீ அந்தமுநீ
அறிந்தேன் குருவாலே ஆதரியே

ஆதரியே
ஆதரவு அற்றவரை
பசிக்கு உணவளி ஒளியளி

ஒளியளி
உலகம் உய்யட்டுமே
போற்றும் உன்னையே என்றும்

என்றும்
சிவன் சிந்தையே
வேண்டும் மணியை கருதே

கருதே
ஒளியை ஒலியை
நாத முடிவில் நல்லாளே

நல்லாளே
சக்தியாம் சிவம்பாதி
அருளாலே பெறலாம் சிவத்தை

சிவத்தை
சிந்தையில் இருத்தியே
அவன் அருளாலே வணங்கி

வணங்கி
பெற்றோர் குருவை
மூர்த்தி தலம் தீர்த்தம்

தீர்த்தம்
அமுதம் கிட்டும்
பசி தாகம் அற்றிடும்

அற்றிடும்
உலக விவகாரம்
உற்றிடும் வீடு பேறு

பேறு
பெறுவதற்கு அறியது
மானிடப் பிறவி இதற்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts