சனி, 10 செப்டம்பர், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 11

உனக்கே
நானும் உரைத்தேன்
உணர்ந்ததை உள்ளபடியே உவந்தே

உவந்தே
வாழலாம் அனைவரும்
ஊக்கமுடன் பற்றுவீர் பரமனை

பரமனை
பார்த்தல் பசிதீரும்
பாவம் போகும் புண்ணியமே

புண்ணியமே
நல்லோர் இணக்கமே
பாரத நாட்டில் பிறந்ததுவே

பிறந்ததுவே
பிறக்காமல் இருக்கவே
அறிந்து உணர்ந்து உய்வீரே

உய்வீரே
நீரும் பாரும்
முயல்வீர் வெற்றி நிச்சயம்

நிச்சயம்
இருந்தால் வெல்லலாம்
நீர் மேல் நெருப்பை சேரலாம்

சேரலாம்
சீவன் சிவனுடம்
சித்தியும் முத்தியும் தருவானே

தருவானே
சகல சம்பத்தும்
சர்வ வல்லமையும் சடுதியில்

சடுதியில்
வருவான் தருவான்
சகல கலை ஞானமே

ஞானமுமே
பெற்ற பின்னரே
போற்றுமே இந்த உலகம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts