புதன், 4 மே, 2016

குண்டலினி சக்தி - தலை ஞான கேந்திரம்!


இறைவன் மீது பக்தி இல்லை எனில், குரு மீது பக்தி இல்லை
எனில் எவனுக்கும் ஞானம் வராது! இறைவனை பணியாத
ஞானி யாராவது உண்டா என்று சொல்லுங்கள்!? பக்தி பெருக்கால்
ஞானம் தோன்றி அதனால் தான் இறைவனை அடைய முடியும்!
பக்தி இல்லையேல் ஞானம் இல்லை!

இன்ப துன்பத்தை சமமாக பார்க்கும் தன்மை! வெளிப்பார்வை
குறைந்து அகப்பார்வை அதிகமாகும்!சதா சும்மா இருப்பது!
இதுவே ஞானியின் லட்சணம்! குண்டலினி சக்தியாக பரிமளிப்பவள்
வாலைத்தாயே! யோக சாஸ்திரம் கீழே மூலம் என்று கூறும்?
நமக்கு அதுவேண்டாம். ஞானம் சொல்வது என்னவென்றால்
கழுத்துக்கு கீழே கர்மமே! தலை மட்டுமே ஞான கேந்திரம்!
குண்டு போல் இருக்கும் இடத்தில் அனல் உள்ளது! அது தான் நீ
என்கிறது ஞானம்! இதுவே பெரும் ரகசியம்! நம் கண்மணி உருண்டையாக
பூமியை போல் பூமியை போல் குண்டு போல் தானே உள்ளது?
பூமியின் உள் மத்தியில் அனல் உள்ளது போல் கண்மணி உள்  மத்தியில்
அனல் உள்ளது. அது நீ தான்! குண்டு + அனல் + நீ  குண்டலினி! நமது
கண்மணி தான் குண்டலினி சக்தி உள்ள இடம்! அது தான் உயிராகிய
ஆத்மா துலங்கும் இடம்!


2 கருத்துகள்:

  1. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஒரு விசயத்தை வெளியிடூகிறிர்கள்

    பதிலளிநீக்கு

Popular Posts