செவ்வாய், 28 மே, 2013

ஜீவன் எங்கிருக்கிறது?

ஜீவன் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியில் செல்வதுதான் புத்திசாலித்தனம்!

நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனையடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம்! உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே!

நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றால், கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரோளியான அந்த இறைவனை அடையலாம் அல்லவா?!

நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts