வியாழன், 10 ஜனவரி, 2013

பிறப்பின் ரகசியம் என்ன ?

பிறப்புக்கு ஆதாரம் என்ன? வினை!! வினை 3 வகை. அதில் கொண்டுவந்த பிராரப்தத்தை கழிப்பது எப்படி? புதிதாக ஆகான்மியம் சேராமல் செய்வது எப்படி? நெறிப்படுத்துவது எப்படி? பகவத் கீதையில் கண்ணன்  சொன்னது என்ன?  100% வினை குறைந்தால் ஆன்மாவிற்கு விடுதலை.

நல் வினை தீ வினை அறுப்பது எப்படி? இருக்கும் குப்பை/வினை  வண்டி வண்டி யாக இருக்குது, புதிதாக சேராமல் இருப்பது எப்படி? வினை போகமே தேகம் கண்டாய்!

பாவிகளே மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது.
நாம் எல்லாம் பாவிகள், ஏன்? கர்மவினை மூட்டை மூட்டையாக உள்ளது.

நமக்கு அறிவே கிடையாது ?  எப்படி ?

இறைவன் இருந்தால் அன்பு மயமாக கருணை மயமான வேலைகள் நடக்கும்.. அப்படி இல்லையே!வினை தீர்க்க என்ன வழி ? இதுவே முதல்பாடம். வினை எந்த ரூபத்தில் உள்ளது ?  எங்கு உள்ளது ? எப்படி அழிப்பது ?

நமக்கு ஒரு விரோதி உள்ளான். அவன் நம்மை விட பலசாலி. அவன் பக்கத்தில் செல்ல முடியாது? ஒரு போக்கிரி அடக்க போலீஸ் சென்று சொல்ல வேண்டும். அவனால் ஒருவருக்கும் நல்லது இல்லை, கெட்டதுதான். அப்புறம்என்ன செய்வது? என் கவுன்ட்டர் தான்!!  அப்படி தான்

நம்ம வினையும் உள்ளது, பலசாலியான இறைவனிடம் முறையிட வேண்டும்.இறைவன் தான் வினையில் இருந்து காக்க வேண்டும் .

இறைவனை நாம் காண முடியாதே? மனோ வாக்கு காயத்திற்கு உட்பட்டவன் மனிதன். குப்பையான வினை யை வைத்து கொண்டு இறைவனிடம் செல்லமுடியாது. குப்பையை நாம் தான் கழிக்க வேண்டும். தவம் செய்தால் வினை அழியும். இறைவன் திருவடியை பிடித்து கொண்டால் புதிதாக கர்மத்தை சேராது பார்த்து கொள்ளலாம்








அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி - அம்மா
அமுதமும் உண்டேன டி ஆணி  -


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

4 கருத்துகள்:

  1. பாலு எனக்கு ஒரு சந்தேகம், அவரவர் கர்மாவை அவரவர் தான் கழிக்கணும் என்று சொல்கிறார்.

    அப்போ திருஞான சம்பந்தர் அவருடைய திருமணத்திற்கு வந்த அனைவருமே கூண்டோடு கைலாசதிற்கு கூட்டி சென்றார் என்று சொல்கிறது. இவர்கள் தவம் செய்யாமலே கைலாசம் சென்று விட்டார்கள். இதை விளக்குங்கள்

    பதிலளிநீக்கு
  2. அய்யா ,

    தங்களின் புதிய பதிவு மிகவும் போற்ற தகுந்தது .அதனின் காணொளி கண்டேன் .மிகவும் அற்புதமாக இருந்தது .மிகவும் மகிழ்ச்சி .மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஒளி உடம்பு பெற்றவரால் அப்படி செய்ய முடியும். அவர் பலத்திற்கு கூடத்தில் இருபவரின் கர்ம வினை அழிப்பது மிகவும்
    எளிமையாக விசயமாக இருந்து இருக்கலாம். திருஞான சம்பந்தர் செய்ததை வள்ளலார் 2025 செய்வார்.

    பதிலளிநீக்கு
  4. அவரிடம் தீக்ஷை பெற்றவரை மட்டும் கல்யாணத்திற்கு அழைத்து இருக்கலாம்

    பதிலளிநீக்கு

Popular Posts