வியாழன், 15 செப்டம்பர், 2011

நாரணர் நான்முகர்

காரண காரியக் கல்விகள் எல்லாம்
கற்பித்தென்னுள்ளே கலந்து கொண்டென்னை
நாரணர் நான்முகர் போற்ற மேல்ஏற்றி
நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
பூரணமாம் இன்பம் பொங்கித் ததும்பப்
புத்தமுதாம் அருட்போனகம் தந்தே
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே
அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் நீரே. -
இராமலிங்க வள்ளலார்

நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள்
நவில் அருகர் புத்தர் முதல் மததலைவர்கள் எல்லாம்
வான் முகத்தில் தோன்றி அருள் சிறிதே அடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம் போனபடியே
தேன் முகந்துன்டவர் எனவே விளையாட நின்ற
சிறுபிள்ளை கூட்டம் என அருட்பெரும் ஜோதியினால்
தான் மிக கண்டறிக எனச் சாற்றிய சற்குருவே
சபையில் நடத்தரசே என் சாற்றும் அணிந்து அருளே. -இராமலிங்க வள்ளலார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts