வெள்ளி, 30 அக்டோபர், 2020

நவராத்திரி - விஜய தசமி

"மங்களமாய் நவராத்திரிப் பூசைக் காக வந்தமர்ந்த திரிசூலி மகிழோங்காரி"

- தேவி பூஜாவிதி
வாலை திரிசூலி ஓங்கார நாதமானவள் ஆதலால் ஓங்காரி! ரீங்காரம் செய்பவள் ஆதலால் ரீங்காரி! திரிசூலம் கையில் ஏந்தியவள் ஆதலால் திரிசூலி! சூரிய சந்திர அக்னி என மூன்று கலையாக துலங்குவதால், திரிசூலம் போல் துலங்குவதால் திரிசூலி நவராத்திரி பூஜைக்காக கன்னியகுமரியிலே வந்தமர்ந்தாளாம்!

மூன்று மூன்று மூன்று வட்டமாக மும்மூன்று நாளாக 9 நாள் பூஜையாம் அதுதான் நவராத்திரி பூஜையாம்! ராத்திரி தானே நமக்கு இப்போது! பாவவினையால் சூழபிறந்திருப்பதால் ராத்திரிதான்! 9 ராத்திரி - நவராத்திரி 9 வட்டத்தை ஒன்றாக்கி - நவகோணத்தில் அமர்ந்திருக்கும் வாலையை கண்டு! 10-ம் நாள் வெற்றி விழாவாக விஜய தசமியாக கொண்டாட வேண்டும்! இதுவே தசரா!

ஞானம்! வாலையை காண கன்னியகுமரி வருக! நவராத்திரி பூஜை உன்னுள் செய்க! உன்னுள் நீ காணவிருக்கும் சிறுபெண் - கன்னியகுமரி - பகவதியம்மனை சிலா ரூபமாக காண வா கன்னியாகுமரிக்கு! பக்தியால் பார்த்தால் பகவதியம்மன்! தவத்தால் உணர்ந்தால் வாலை! பார்! உணர்! கன்னி'ய'குமரியிலே! பிள்ளை நம்மை கண்டால் தாய்க்கு மகிழ்ச்சி தானே!

எத்தனையோ பிறவி கடந்து இப்போதாவது இந்த தாயை காண வருகிறானே! இந்த தாயின் மகிமை உணர்ந்தானே என மகிழ்ந்து நம்மை வரவேற்பாள் அந்த ஓங்காரி! ஓம் ஆக இருப்பவள்! ஓம் எனும் நாதமாக விளங்குபவள்! பிரணவஸ்வரூபிணி!!

படியுங்கள்! பண்படுங்கள்!
பரம்பொருள் அருள் கிட்டும்!
ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,
ஞானசற்குரு சிவ செல்வராஜ்

                    www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts