வியாழன், 12 டிசம்பர், 2019

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா"

 என மகாகவி பாரதியார் ஒளி உள்ள,
ஒளி உணர்வு உள்ள, ஒளியாகிய பரம்பொருளை அறிந்தவர்களை அறைகூவி அழைக்கிறார்!

நெஞ்சிலே உறுதியுடன் நேர்மை திறமும் கொண்டு விடுதலைக்காக பாடுபட வருக வருக என அழைக்கிறார்!

நாட்டு விடுதலைக்காக?! இல்லை?! நம் விடுதலைக்கு!
அறியாமை எனும் விலங்கு பூண்டு, மனம் எனும் அரக்கனுக்கு அடிமையாக கிடைக்கிறோம்!
விடுதலை பெற வேண்டாமா?

ஆன்மபலம் பெற்று ஒளியுடல் பெற விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ எந்த கட்டுக்குள்ளும் சிக்காது சுதந்திரமாக வாழ சித்தம்போல வாழ சிவமாகிய ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா!

ஞான சற்குருவை நாடி திருவடி தீட்சை பெற்று உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!
ஆன்ம நேய உணர்வு பெறுவாய் மரணமிலா பெருவாழ்வு கிட்டும்!

இதுவே பாரதியின் அறைகூவல்!

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் போலவே,
மகாகவி பாரதியாரும் மனதுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களை
 உசுப்பி சித்தம் போக்கு சிவம் போக்கென சுதந்திரமாக வாழ வழிகாட்டினார்!!


ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா
நூல் : திருவருட்பாமாலை
 நாலஞ்சாறு
பக்கம் : 71
குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts