வியாழன், 14 ஜூலை, 2016

உட்புகு வாசல்


விழிமூலமாகவே விழித்திருந்தே விழிப்புடன் இருந்தே உன்னுள் துலங்கும்
அந்த அருட்பெருஞ்ஜோதியை தங்க ஜோதியை காண வேண்டும்! தடையாக இருக்கும் 7 திரைகளை நீக்கு! இது தான் ஞான சாதனை!  செய் என்கிறார் வள்ளலார்!

நீ பிறந்ததே  இதற்குத்தான்! இனி பிறவாமல் இருக்க இப்போது
பிறந்து விட்ட நீ இறவாமல் இருக்க  இந்த ஞான தவத்தை
நீ செய்தே ஆக வேண்டும் என்றார்!  "என்மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே!"என்று பகர்ந்தார்!

சாகாதவனே சித்தர் என்கிறார்! சத்திய ஞான  சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க நீதியை நான் பெற்று கொண்டனன்" என்று
தெளிவாக உறுதியாக அறுதியிட்டு கூறுகிறார் வள்ளல் பெருமான்!

 யார் பெறுவார்  இப்படியொரு அதி உன்னத ஞானம்!யார் உளார் இப்படியொரு ஞான சற்குரு! வடலூர் சத்திய ஞான சபையில் தங்க ஜோதியை காண்க! அது போலவே உன்னுள் உன் ஆத்ம ஜோதியை தங்க ஜோதியை காண வேண்டும்!  காண்! கண்ணே வழி! உட்புகு வாசல் அங்கு உள்ளது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts