இறைவனை உணரவும் நொந்து வாழாமல் வாழ்வாங்கு வாழவும் ஓர் வழி-உபாயம் உள்ளது!
அது நம் மனம் அடங்கும் இடத்தில் தவம் செய்வது ஆகும்! அதாவது நம் கண்மணி வாசலில் உள்ள சவ்வே நம் வினை நம் வினைத் தொகுதியான விதி! அதிலிருந்து செயல்படுவதே மனம்!
கண்மணி வாசலில் இருந்து விதியாகிய சவ்விலிருந்து புறப்படும் மனதை வெளியே வர விடாது அதை அதிலேயே நிறுத்துவது தான் சாதனை! தவமாகும்! மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே! அங்கு மட்டுமே மனம் அடங்கும்! நாம் நம் மனதை அங்கு மட்டுமே நிறுத்த முடியும்! இப்படி செய்து சும்மா இருப்பதுவே ஞான சாதனை! பரம ரகசியம்!
இது தெரிந்த அறிந்த உபதேசிக்கும் குருமார்களை வணங்கிடவும் தெரியவில்லையே!
எந்தை இறைவன் இருக்கும் மணிமன்றம் கண்மணி உள் போக தெரியவில்லையே! ஞான சற்குரு மூலம் தீட்சை பெற்று தவம் செய்தால் உட்புகலாம்!
ஞான சற்குரு சிவசெல்வராஜ் - திருவருட் பாமாலை (106)
வணக்கம்
பதிலளிநீக்குஅருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-